Wednesday 19 May 2021

நாற்காலி - சிறுகதை - கி ராஜநாராயணன்

 கி ரா வின் மறைவு இலகீய உலகில் பேரிழப்பு. கோபல்ல கிராமம் எனக்கு பிடித்த நாவல். அதன் தொடர்ச்சி தான் அவருடைய சாகித்திய அகாடமி பரிசிபெற்ற 

“கோபல்லபுரத்து மக்கள்” நாவல். அவர் சிறுகதைகளில் கோமதி, கன்னிமை,கதவு போன்ற கதைகள் சிறப்பானவை. அவரின் நாற்காலி கதையை இங்கு தருகிறன்


நாற்காலி - கி.ராஜநாராயணன்

முதல் நாள் எங்கள் வீட்டுக்கு ஒரு குடும்ப நண்பர் விஜயம் செய்தார். அவர் ஒரு சப்ஜட்ஜ். kee.ra.8வந்தவர் நம்மைப் போல்வேட்டி சட்டை போட்டுக்கொண்டு வரப்படாதோ? சூட்டும் பூட்டுமாக வந்து சேர்ந்தார். எங்கள் வீட்டில் முக்காலிதான்உண்டு. அதன் உயரமே முக்கால் அடிதான். எங்கள் பாட்டி தயிர் கடையும்போது அதிலேதான் உட்கார்ந்து கொள்வாள்,அவளுக்கு பாரியான உடம்பு. எங்கள் தாத்தா   தச்சனிடம் சொல்லி அதைக் கொஞ்சம் அகலமாகவே செய்யச்சொல்லியிருந்தார்.

சப்ஜட்ஜுக்கும் கொஞ்சம் பாரியான உடம்புதான். வேறு ஆசனங்கள் எங்கள் வீட்டில் இல்லாததால் அதைத்தான்அவருக்கு கொண்டுவந்து போட்டோம். அவர் அதன் விளிம்பில் ஒரு கையை ஊன்றிக்கொண்டு உட்காரப் போனார்.இந்த முக்காலியில் ஒரு சனியன் என்னவென்றhல் அதன் கால்களுக்கு நேராக இல்லாமல் பக்கத்தில் பாரம்அமுங்கினால் தட்டிவிடும்! நாங்கள் எத்தனையோ தரம் உறியில் வைத்திருக்கும் நெய்யைத் திருட்டுத்தனமாகஎடுத்துத் தின்பதற்கு முக்காலி போட்டு ஏறும் போது அஜாக்கிரதையினால் பலதரம் கீழே விழுந்திருக்கிறோம். பாவம்,இந்த சப்ஜட்ஜும் இப்பொழுது கீழே விழப்போகிறாரே என்று நினைத்து, அவரை எச்சரிக்கை செய்ய நாங்கள் வாயைத்திறப்பதற்கும் அவர் தொபுகடீர் என்று கீழே விழுந்து உருளுவதற்கும் சரியாக இருந்தது. நான், என் தம்பி, கடைக்குட்டித்தங்கை மூவருக்கும் சிரிப்பு தாங்க முடியவில்லை. புழக்கடைத் தோட்டத்தைப் பார்க்க ஓடினோம். சிரிப்புஅமரும்போதெல்லாம் என் தங்கை அந்த சப்ஜட்ஜ் மாதிரியே கையை ஊன்றிக் கீழே உருண்டு விழுந்து காண்பிப்பாள்.பின்னும் கொஞ்சம் எங்கள் சிரிப்பு நீளும்.

எங்கள் சிரிப்புக்கெல்லாம் முக்கிய காரணம் அவர் கீழே விழும் போது பார்த்தும் எங்கள் பெற்றோர்கள், தாங்கள்விருந்தாளிக்கு முன்னாள் சிரித்துவிடக்கூடாதே என்று வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டதை நினைத்துத்தான்!

ஆக, நாங்கள் எல்லாருக்கும் சேர்த்துச் சிரித்துவிட்டு வீட்டுக்குள் பூனைபோல் அடி எடுத்து வைத்து நுழைந்துபார்த்தபோது அந்தப் பாரியான உடம்புள்ள விருந்தாளியை காணவில்லை. அந்த முக்காலியையும் காணவில்லை. 'அதை அவர் கையோடு கொண்டு போயிருப்பாரோ?' என்று என் தங்கை என்னிடம் கேட்டாள்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின்னரே, எங்கள் வீட்டில் எப்படியாவது ஒரு நாற்காலி செய்துவிடுவது என்ற முடிவுஎடுக்கப்பட்டது. இந்த நாற்காலி செய்வதில் ஒரு நடைமுறைக் கஷ்டம் என்ன என்றால், முதலில் பார்வைக்கு எங்கள்ஊரில் ஒரு நாற்காலி கூடக் கிடையாது; அதோடு நாற்காலி செய்யத் தெரிந்த தச்சனும் இல்லை.

'நகரத்தில் செய்து விற்கும் நாற்காலியை வாங்கிக்கொண்டு வந்துவிட்டால் போச்சு' என்று எங்கள் பெத்தண்ணா ஒருயோசனையை முன் வைத்தான். அது உறுதியாக இராது என்று நிராகரித்துவிட்டார் எங்கள் அப்பா.

பக்கத்தில் ஒரு ஊரில் கெட்டிக்காரத் தச்சன் ஒருவன் இருப்பதாகவும் அவன் செய்யாத நாற்காலிகளே கிடையாதுஎன்றும், கவர்னரே வந்து அவன் செய்த நாற்காலிகளைப் பார்த்து மெச்சி இருக்கிறார் என்றும் எங்கள் அத்தைசொன்னாள்.

அத்தை சொன்னதிலுள்ள இரண்டாவது வாக்கியத்தைக் கேட்டதும் அம்மா அவளை, 'ஆமா, இவ ரொம்பக் கண்டா'என்கிற மாதிரிப் பார்த்துவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

அப்பா வேலையாளைக் கூப்பிட்டு, அந்தத் தச்சனுடைய ஊருக்கு அவனை அனுப்பிவிட்டு எங்களோடு வந்துஉட்கார்ந்தார். இப்போது, நாற்காலியை எந்த மரத்தில் செய்யலாம் என்பது பற்றி விவாதம் நடந்து கொண்டிருந்தது.

"தேக்கு மரத்தில் தான் செய்ய வேண்டும். அதுதான் தூக்க வைக்க லேசாகவும் அதே சமயத்தில் உறுதியாகவும்இருக்கும்" என்றாள் பாட்டி, தன்னுடைய நீட்டிய கால்களைத் தடவி விட்டுக் கொண்டே. (பாட்டிக்குத் தன்னுடையகால்களின் மீது மிகுந்த பிரியம். சதா அவற்றைத் தடவிவிட்டுக் கொண்டே இருப்பாள்!)

இந்தச் சமயத்தில் எங்கள் தாய் மாமனார் எங்கள் வீட்டுக்குள் வந்தார். எங்கள் பெத்தண்ணா ஓடிபோய் அந்தமுக்காலியைத் தூக்கிக்கொண்டு வந்தான். சிறிதுநேரம் வீடே கொல்லென்று சிரித்து ஓய்ந்தது.

மாமனார் எங்கள் வீட்டுக்கு வந்தால் அவருக்கென்று உட்காரு வதற்கு அவரே ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்துவைத்திருக்கிறார். தலை போனாலும் அந்த இடத்தில்தான் அவர் உட்காருவார். பட்டக சாலையின் தெற்குஓரத்திலுள்ள சுவரை ஒட்டியுள்ள ஒரு தூணில் சாய்ந்துதான் உட்காருவார். உட்கார்ந்ததும் முதல் காரியமாகத் தம்குடுமியை அவிழ்த்து ஒருதரம் தட்டித் தலையைச் சொறிந்து கொடுத்துத் திரும்பவும் குடுமியை இறுக்கிக்கட்டிக்கொண்டு விடுவார். இது அவர் தவறாமல் செய்கிற காரியம். இப்படிச் செய்து விட்டு அவர் தம்மையொட்டியுள்ளதரையைச் சுற்றிலும் பார்ப் பார். "தலையிலிருந்து துட்டு ஒன்றும் கிழே விழுந்ததாகத் தெரிய வில்லை" என்று அண்ணாஅவரைப் பார்த்து எக்கண்டமாகச் சொல்லிச் சிரிப்பான்.

அவர் எங்கள் வீட்டுக்கு வரும்போதெல்லாம் இப்படிக் காகித பாணங்களினால் துளைத்தெடுக்கப்படுவார்! 'சம்பந்திக்காரர்கள்; நீங்கள் பார்த்து என்னைக் கேலி செய்யாவிட்டால் வேறு யார் செய்வார்கள்' என்கிற மாதிரிதிறக்காமல் கல்லுப்பிள்ளையார் மாதிரி அவர் பாட்டுக்கு உட்கார்ந்து புன்னகையோடு இருப்பார். எங்களுடைய ஏடாகிப்பேச்சுக்களின் காரம் அதிகமாகும்போது மட்டும் அம்மா எங்களைப் பார்த்து ஒரு பொய் அதட்டுப் போடு வாள். அந்தஅதட்டிடு வாக்கியத்தின் கடைசி வார்த்தை "கழுதைகளா" என்று முடியும்.

மாமனார் வந்து உட்கார்ந்ததும், அம்மா எழுந்திருந்து அடுப்படிக்கு அவசரமாய்ப் போனாள். அவளைத் தொடர்ந்துஆட்டுக்குட்டியைப் போல் அப்பாவும் பின்னால் போனார்.

கொஞ்ச நேரத்துக்கெல்லாம் ஆளோடி வழியாக அம்மா கையில் வெள்ளித் தம்ளரில் காயமிட்ட மோரைஎடுத்துக்கொண்டு நடந்து வர, அம்மாவுக்குப் பின்னால் அப்பா அவளுக்குத் தெரியாமல் எங்களுக்கு மட்டும் தெரியும்படிவலிப்புக் காட்டிக்கொண்டே அவள் நடந்துவருகிற மாதிரியே வெறுங்கையைத் தம்ளர் ஏந்துகிற மாதிரிபிடித்துக்கொண்டு நடந்து வந்தார்! அவர் அப்படி நடந்து வந்தது, 'அவா அண்ணா வந்திருக்கானாம்; ரொம்ப அக்கறையாமோர் கொண்டுபோய்க் கொடுக்கிறதைப் பாரு' என்று சொல்லு கிறது மாதிரி இருந்தது.

மோரும் பெருங்காயத்தின் மணமும், நாங்களும் இப்பொழுதே மோர் சாப்பிடணும் போல் இருந்தது.

மாமனார் பெரும்பாலும் எங்கள் வீட்டுக்கு வருகிறது மோர் சாப்பிடத்தான் என்று நினைப்போம். அந்தப் பசுமாட்டின்மோர் அவ்வளவு திவ்வியமாய் இருக்கும். அதோடு எங்கள் மாமனார் எங்கள் ஊரிலேயே பெரிய கஞ்சாம்பத்தி.அதாவது, ஈயாத லோபி என்று நினைப்பு எங்களுக்கு.

இந்தப் பசுவை அவர் தம்முடைய தங்கைக்காகக் கன்னாவரம் போய்த் தாமே நேராக வாங்கிக்கொண்டு வந்தார். இந்தக்காராம்பசுவின் கன்றுக்குட்டியின் பேரில் என் தம்பிக்கும் குட்டித் தங்கைக்கும் தணியாத ஆசை. வீட்டைவிட்டுப்போகும்போதும் வீட்டுக்குள் வரும்போதும் மாமனார் பசுவை ஒரு சுற்றிச் சுற்றி வந்து அதைத் தடவிக்கொடுத்து (தன்கண்ணே எங்கே பட்டு விடுமோ என்ற பயம்!) இரண்டு வார்த்தை சிக்கனமாகப் புகழ்ந்து விட்டுத்தான் போவார். 'பால்வற்றியதும் பசுவை அவர் தம்மு டைய வீட்டுக்குக் கொண்டுபோய் விடுவார். கன்றுக்குட்டியும் பசுவோடு போய்விடும்'என்ற பெரிய பயம் என் சிறிய உடன் பிறப்புகளுக்கு.

பின்னால் ஏற்படப் போகிற இந்தப் பிரிவு அவர்களுக்குக் கன்றுக்குட்டியின் மெல் பிரீதியையும் மாமனாரின் பேரில்அதிகமான கசப்பையும் உண்டுபண்ணி விட்டது. அவர் ருசித்து மோரைச் சாப்பிடும்போது இந்தச் சின்னஞ்சிறுசுகள்தங்களுடைய பார்வை யாலேயே அவரைக் குத்துவார்கள்; கிள்ளுவார்கள்!

நாற்காலி விவாதத்தில் மாமனாரும் அக்கறை காட்டினார். தமக்கும் ஒரு நாற்காலி செய்ய வேண்டுமென்று பிரியம்இருப்பதாகத் தெரிவித்தார். எங்களுக்கும் ஒரு துணை கிடைத்தது மாதிரி ஆயிற்று.

வேப்ப மரத்தில் செய்வது நல்லது என்றும், அதில் உட்கார்ந்தால் உடம்புக்கு குளிர்ச்சி என்றும், மூலவியாதி கிட்டநாடாது என்றும் மாமனார் சொன்னார். வேப்பமரத்தைப்பற்றிப் பிரஸ்தாபித்தும் அப்பா மாமனாரை ஆச்சரியத்தோடுகூடிய திருட்டு முழியால் கவனித்தார். எங்கள் மந்தைப் புஞ்சையில் நீண்ட நாள் நின்று வைரம் பாய்ந்த ஒருவேப்பமரத்தை வெட்டி ஆறப்போட வேண்டுமென்று முந்தாநாள் தான் எங்கள் பண்ணைக்காரனிடம் அப்பாசொல்லிக்கொண்டு இருந்தார்.

பெத்தண்ணா சொன்னான், "பூவரசங் கட்டையில் செய்தால் ரொம்ப நன்றாக இருக்கும். அது கண் இறுக்கமுள்ள மரம்.நுண்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும்; உறுதியுங்கூட" என்றhன்

அக்கா சொன்னாள், "இதுகளெல்லாம் வெளிர் நிறத்திலுள்ள வைகள். பார்க்கவே சகிக்காது. கொஞ்சநாள் போனால்இதுகள் மேல்; நமக்கு ஒரு வெறுப்பே உண்டாகிவிடும். நான் சொல்லு கிறேன், செங்கரும்பு நிறத்திலோ அல்லதுஎள்ளுப் பிண்ணாக்கு மாதிரி கறுப்பு நிறத்திலோ இருக்கிற மரத்தில்தான் செய்வது நல்லது; அப்புறம் உங்கள் இஷடம்."பளிச்சென்று எங்கள் கண்களுக்கு முன்னால் கண்ணாடி போல் மின்னும் பளபளப்பான கறுப்பு நிறத்தில் கடைந்தெடுத்தமுன்னத்தங் கால்களுடனும், சாய்வுக்கு ஏற்றபடி வளைந்த, சோம்பல் முறிப்பது போலுள்ள பின்னத்தங் கால்களுடனும்ஒரு சுகாசனம் தோன்றி மறைந்தது.

எல்லாருக்குமே அவள் சொன்னது சரி என்று பட்டது. ஆக எங்களுக்கு ஒன்றும், எங்கள் மாமனார் வீட்டுக்கு ஒன்றுமாகஇரண்டு நாற்காலிகள் செய்ய உடனே ஏற்பாடு செய்யப்பட்டது.

இரண்டு நாற்காலிகளும் எங்கள் வீட்டில் வந்து இறங்கியபோது அதில் எந்த நாற்காலியை வைத்துக்கொண்டு எந்தநாற்காலியை மாமனார் வீட்டுக்குக் கொடுத்தனுப்புவது என்று எங்களுக்குத் தெரியவில்லை. ஒன்றைப் பார்த்தால்மற்றதைப் பார்க்க வேண் டாம். அப்படி ராமர் லெச்சுமணர் மாதிரி இருந்தது. ஒன்றை வைத்துக்கொண்டு மாமனார்வீட்டுக்கு ஒன்றைக் கொடுத்தனுப் பினோம். கொடுத்தனுப்பியதுதான் நல்ல நாற்காலியோ என்று ஒரு சந்தேகம்.

ஒவ்வொருத்தராய் உட்கார்ந்து பார்த்தோம். எழுந்திருக்க மனசே இல்லை. அடுத்தவர்களும் உட்கார்ந்துபார்க்கவேண்டுமே என்பதற் காக எழுந்திருக்க வேண்டியிருந்தது. பெத்தண்ணா உட்கார்ந்து பார்த்தான். ஆ…ஹா என்றுரசித்துச் சொன்னான். இரண்டு கைகளா லும் நாற்காலியின் கைகளைத் தேய்த்தான். சப்பணம் போட்டு உட்கார்ந்துபார்த்தான். "இதுக்கு ஒரு உறை தைத்துப் போட்டு விட வேணும். இல்லையென்றால் அழுக்காகிவிடும்" என்று அக்காசொன்னாள்.

குட்டித் தங்கைக்கும் தம்பிப் பயலுக்கும் அடிக்கடி சண்டை வரும், "நீ அப்போப் பிடிச்சி உட்கார்ந்துகிட்டே இருக்கியே?எழுந்திருடா, நான் உக்காரணும் இப்போ" என்று அவனைப் பார்த்துக் கத்துவாள். "ஐயோ, இப்பத்தானே உட்கார்ந்தேன்;பாரம்மா இவளை" என்று சொல்லுவான், அழ ஆரம்பிக்கப் போகும் முகத்தைப் போல் வைத்துக்கொண்டு.

தீ மாதிரி பரவிவிட்டது ஊருக்குள், எங்கள் வீட்டிற்கு நாற்காலி வந்த விஷயம். குழந்தைகளும் பெரியவர்களும் பெருங்கூட்டமாக வந்து வந்து பார்த்துவிட்டுப் போனார்கள். சிலர் தடவிப் பார்த்தார்கள். சிலர் உட்கார்ந்தே பார்த்தார்கள். ஒருகிழவனார் வந்து நாற்காலியைத் தூக்கிப் பார்த்தார். "நல்ல கனம், உறுதியாகச் செய்திருக்கிறான்" என்று தச்சனைப்பாராட்டினார்.

கொஞ்ச நாள் ஆயிற்று.

ஒரு நாள் ராத்திரி ரெண்டு மணி இருக்கும். யாரோ வந்து கதவைத் தட்டினார்கள். உள் திண்ணையில் படுத்திருந்தபெத்தண்ணா போய் கதவைத் திறந்தான். ஊருக்குள் யாரோ ஒரு முக்கியமான பிரமுகர் இப்பொழுதுதான் இறந்துபோய்விட்டாரென்றும் நாற்காலி வேண்டுமென்றும் கேட்டு எடுத்துக்கொண்டு போனார்கள்.

இறந்துபோன ஆசாமி எங்களுக்கும் வேண்டியவர் ஆனதால் நாங்கள் யாவரும் குடும்பத்தோடு போய் துட்டியில்கலந்துகொண் டோம். துட்டி வீட்டில் போய் பார்த்தால்...? எங்கள் வீட்டு நாற்காலியில் தான் இறந்துபோன அந்தப்'பிரமுகரை' உட்கார்த்தி வைத்திருந்தார்கள்.

இதற்குமுன் எங்கள் ஊரில் இறந்து போனவர்களைத் தரையில் தான் உட்கார்த்தி வைப்பார்கள். உரலைப் படுக்கவைத்துஅது உருண்டுவிடாமல் அண்டை கொடுத்து, ஒரு கோணிச் சாக்கில் வரகு வைக்கோலைத் திணித்து, அதைப்பாட்டுவசத்தில் உரலின் மேல் சாத்தி, அந்தச் சாய்மான திண்டுவில் இறந்துபோனவரை, சாய்ந்துஉட்கார்ந்திருப்பதுபோல் வைப்பார்கள்.

இந்த நாற்காலியில் உட்காரவைக்கும் புதுமோஸ்தரை எங்கள் ஊர்க்காரர்கள் எந்த ஊரில் போய் பார்த்துவிட்டுவந்தார்களோ? எங்கள் வீட்டு நாற்காலிக்குப் பிடித்தது வினை. (தரை டிக்கெட்டிலிருந்து நாற்காலிக்கு வந்துவிட்டார்கள்)

அந்தவீட்டு 'விசேஷம்' முடிந்து நாற்காலியை எங்கள் வீட்டு முன்தொழுவில் கொண்டுவந்து போட்டுவிட்டுபோனார்கள். அந்த நாற்காலியைப் பார்க்கவே எங்கள் வீட்டுக் குழந்தைகள் பயப்பட்டன. வேலைக்காரனை கூப்பிட்டுஅதைக் கிணற்றடிக்குக் கொண்டுபோய் வைக்கோலால் தேய்த்துத் தேய்த்துப் பெரிய வாளிக்கு ஒரு பதினைந்து வாளிதண்ணீர்விட்டுக் கழுவி, திரும்பவும் கொண்டுவந்து முன் தொழுவத்தில் போட்டோம். பலநாள் ஆகியும் அதில் உட்காரஒருவருக்கும் தைரியம் இல்லை. அதை எப்படித் திரும்பவும் பழக்கத்துக்குக் கொண்டு வருவது என்றும் தெரியவில்லை.

ஒரு நாள் நல்ல வேளையாக எங்கள் வீட்டுக்கு ஒரு விருந்தாளி வந்தார். அந்த நாற்காலியை எடுத்துக்கொண்டு வந்துஅவருக்குப் போடச் சொன்னோம். அவரோ, "பரவாயில்லை, நான் சும்மா இப்படி உட்கார்ந்து கொள்கிறேன்" என்றுஜமக்காளத்தைப் பார்த்துப் போனார். எங்களுக்கு ஒரே பயம், அவர் எங்கே கீழே உட்கார்ந்து விடுவாரோ என்று.குடும்பத்தோடு அவரை வற்புறுத்தி நாற்காலி யில் உட்கார வைத்தோம். அவர் உட்கார்ந்த உடனே சின்னத் தம்பியும்குட்டித் தங்கையும் புழக்கடைத் தோட்டத்தைப் பார்த்து ஓடினார்கள். மத்தியில் வந்து நாற்காலியில் உட்கார்ந்தவருக்குஎன்ன ஆச்சு என்று எட்டியும் பார்த்துக் கொள்வார்கள்!

மறுநாள் எங்கள் வீட்டுக்கு வந்த ஒரு உள்ளூர்க் கிழவனார் தற்செயலாகவே வந்து நாற்காலியில் உட்கார்ந்துஎங்களுக்கு மேலும் ஆறுதல் தந்தார். ('இப்போதே அவர் அந்த நாற்காலியில் உட்கார்ந்து பார்த்துக் கொள்கிறார்!' என்றுபெத்தண்ணா என் காதில் மட்டும் படும்படியாகச் சொன்னான்.)

இப்படியாக, அந்த நாற்காலியைப் 'பழக்கி'னோம். முதலில் வீட்டிலுள்ள பெரியவர்கள் உட்கார்ந்தோம். குழந்தைகளுக்குஇன்னும் பயம் தெளியவில்லை. "கொஞ்சம் உட்காரேண்டா நீ முதலில்" என்று கெஞ்சுவாள், குட்டித் தங்கை தம்பிப்பயலைப் பார்த்து. "ஏன் நீ உட்காருவதுதானே?" என்பான் அவன் வெடுக்கென்று.

எங்கள் வீட்டுக்கு வந்திருந்த பக்கத்துத் தெரு சுகந்தி தன்னுடைய ஒரு வயசுத் தம்பிப் பாப்பாவைக் கொண்டுவந்துஉட்காரவைத்தாள், அந்த நாற்காலியில். அதிலிருந்துதான் எங்கள் வீட்டுக் குழந்தைகளும் பயமில்லாமல் உட்காரஆரம்பித்தார்கள்.

திரும்பவும் ஒரு நாள் ராத்திரி, யாரோ இறந்துபோய்விட்டார்கள் என்று நாற்காலியை தூக்கிக்கொண்டுபோய்விட்டார்கள் இப்படி அடிக்கடி நடந்தது.

நாற்காலியை வருத்தத்தோடுதான் கொடுத்தனுப்புவோம். வந்து கேட்கும் இழவு வீட்டுக்காரர்கள் எங்கள் துக்கத்தைவேறு மாதிரி அர்த்தப்படுத்திக் கொள்வார்கள். தங்களவர்கள் இறந்து போன செய்தியைக் கேட்டுத்தான் இவர்கள்வருத்தம் அடைகிறார்கள் போலிருக்கிறது என்று நினைத்துக்கொள்வார்கள்!

தூக்கம் கலைந்த எரிச்சல் வேறு. "செத்துத் தொலைகிறவர்கள் ஏன்தான் இப்படி அகாலத்தில் சாகிறார்களோதெரியவில்லை?" என்று அக்கா ஒருநாள் சொன்னாள்.

"நல்ல நாற்காலி செய்தோமடா நாம்; செத்துப்போன ஊர்க் காரன்கள் உட்காருவதற்காக, சே!" என்றுஅலுத்துக்கொண்டான் அண்ணன்.

"நாற்காலி செய்யக் கொடுத்த நேரப் பலன்" என்றாள் அத்தை.

பெத்தண்ணா ஒரு நாள் ஒரு யோசனை செய்தான். அதை நாங்கள் இருவர் மட்டிலும் தனியாக வைத்துக் கொண்டோம்.

ஒரு நாள் அம்மா என்னை ஏதோ காரியமாக மாமனாரின் வீட்டுக்குப் போய்வரும்படி சொன்னாள்.

நான் அவருடைய வீட்டுக்குள் நுழைந்தபோது மாமனார் நாற் காலியில் அமர்க்களமாய் உட்கார்ந்து வெற்றிலைபோட்டுக் கொண் டிருந்தார். அவர் வெற்றிலை போடுவதைப் பார்த்துக்கொண் டிருப்பதே சுவாராஸ்யமானபொழுதுபோக்கு. தினமும் தேய்த்துத் துடைத்த தங்க நிறத்தில் பளபளவென்றிருக்கும் சாண் அகலம், முழ நீளம், நாலுவிரல் உயரம் கொண்ட வெற்றிலைச் செல்லத்தை, 'நோகுமோ நோகாதோ' என்று அவ்வளவு மெல்லப் பக்குவ மாகத்திறந்து, பூஜைப் பெட்டியிலிருந்து சாமான்களை எடுத்து வைக்கிற பதனத்தில் ஒவ்வொன்றாக எடுத்து வெளியில்வைப்பார். வெற்றிலையை நன்றாகத் துடைப்பாரே தவிர, காம்பு களைக் கிள்ளும் வழக்கம் அவரிடம் கிடையாது. (அவ்வளவு சிக்கனம்!) சில சமயம் மொறசல் வெற்றிலை அகப்பட்டுவிட்டால் மட்டும் இலையின் முதுகிலுள்ளநரம்புகளை உரிப்பார். அப்பொழுது நமக்கு, "முத்தப்பனைப் பிடிச்சு முதுகுத்தோலை உறிச்சி பச்சை வெண்ணையைத்தடவி...." என்ற வெற்றிலையைப் பற்றிய அழிப் பாங்கதைப் பாடல் ஞாபகத்துக்கு வரும்.

களிப்பாக்கை எடுத்து முதலில் முகர்ந்து பார்ப்பார். அப்படி முகர்ந்து பார்த்துவிட்டால் 'சொக்கு' ஏற்படாதாம். அடுத்துஅந்தப் பாக்கை ஊதுவார்; அதிலுள்ள கண்ணுக்குத் தெரியாத பாக்குப் புழுக்கள் போகவேண்டாமா அதற்காக,ஆரம்பத்தில் மெதுவாக ஆரம்பிக்கும் இந்த முகர்ந்து பார்த்தலும் ஊதலும் வரவர வேகமாகி ஒரு நாலைந்து தடவைமூக்குக்கும் வாய்க்குமாக, கை மேலும் கீழும் உம் உஷ், உம் உஷ் என்ற சத்தத்துடன் சுத்தமாகி டபக்கென்று வாய்க்குள்சென்றுவிடும்.

ஒருவர் உபயோகிக்கும் அவருடைய சுண்ணாம்பு டப்பியைப் பார்த்தாலே அவருடைய சுத்தத்தைப் பற்றித்தெரிந்துவிடும். மாமனார் இதிலெல்லாம் மன்னன். விரலில் மிஞ்சிய சுண்ணாம்பைக் கூட வீணாக மற்றப்பொருள்களின் மேல் தடவமாட்டார். அவருடைய சுண்ணாம்பு டப்பியை எடுத்துக் கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம்.பதினைந்து வருஷத்துக்கு முன் வாங்கிய எவரெடி டார்ச் லைட் இன்னும் புத்தம் புதுசாக இப்போதுதான் கடையிலிருந்து வாங்கிக்கொண்டு வந்ததோ என்று நினைக்கும்படியாக உபயோகத்தில் இருக்கிறது அவரிடம். அதோடு சேர்த்துவாங்கிய எங்கள் வீட்டு டார்ச் லைட் சொட்டு விழுந்து நெளிசலாகி மஞ்சள் கலரில் பார்க்கப் பரிதாபமாக, சாகப் போகும்நீண்ட நாள் நோயாளி யைப் போல் காட்சியளிக்கிறது.

நாற்காலியை அவர் தவிர அந்த வீட்டில் யாரும் உபயோகிக்கக் கூடாது. காலையில் எழுந்திருந்ததும் முதல் காரியமாகஅதைத் துடைத்து வைப்பார். ஓர் இடத்திலிருந்து அதை இன்னோர் இடத் துக்குத் தாமே மெதுவாக எடுத்துக்கொண்டுபோய்ச் சத்தமில்லாமல் தண்ணீர் நிறைந்த மண்பானையை இறக்கி வைப்பது போல் அவ்வளவு மெதுவாக வைப்பார்.

மாமனார் என்னைக் கண்டதும், "வரவேணும் மாப்பிள்ளைவாள்" என்று கூறி வரவேற்றார். "கொஞ்சம் வெற்றிலைபோடலாமோ?" என்று என்னைக் கேட்டுவிட்டுப் பதிலும் அவரே சொன்னார்: "படிக்கிற பிள்ளை வெற்றிலை போட்டால்கோழி முட்டும்!"

அம்மா சொல்லியனுப்பிய தகவலை அவரிடம் சொல்லிவிட்டு வீடு திரும்பினேன்.

ராத்திரி அகாலத்தில் கதவு தட்டும் சத்தம் கேட்டது. வீட்டில் எல்லாம் அயர்ந்த தூக்கம். நான் பெத்தண்ணாவைஎழுப்பினேன்.

நாற்காலிக்காக வந்த ஒரு இழவு வீட்டுக்காரர்கள் வெளியில் நின்றுக்கொண்டிருந்தார்கள். பெத்தண்ணா அவர்களைத்தெருப்பக்கம் அழைத்துக்கொண்டு போனான். நானும் போனேன். வந்த விஷ யத்தை அவர்கள் சொல்லி முடித்ததும்பெத்தண்ணா அவர்களிடம் நிதானமாகப் பதில் சொன்னான்.

"நாற்காலிதானே? அது எங்கள் மாமனார் வீட்டில் இருக்கிறது அங்கே போய்க் கேளுங்கள், தருவார். நாங்கள்சொன்னதாகச் சொல்ல வேண்டாம். இப்படிக் காரியங்களுக்கு இல்லை என்று சொல்ல முடியுமா? அங்கேகிடைக்காவிட்டால் நேரே இங்கே வாருங்கள்; அப்புறம் பார்த்துக்கொள்வோம்" என்று பேசி அவர் களை அனுப்பிவிட்டு,வீட்டுக்குள் வந்து இருவரும் சப்தமில்லாமல் சிரித்தோம்.

அப்பா தூக்கச் சடைவோடு படுக்கையில் புரண்டுகொண்டே, " யார் வந்தது?" என்று கேட்டார்.

"வேலை என்ன? பிணையலுக்கு மாடுகள் வேணுமாம்" என்றான் பெத்தண்ணா.

துப்பட்டியை இழுத்துப் போர்த்திக்கொண்டு மறுபுறம் திரும்பிப் படுத்துக்கொண்டார் அப்பா.

இப்பொழுது மாமனார் காட்டில் பெய்து கொண்டிருந்தது மழை!

ரொம்ப நாள் கழித்து, நான் மாமனாரின் வீட்டுக்கு ஒரு நாள் போனபோது அவர் தரையில் உட்கார்ந்து வெற்றிலைபோட்டுக் கொண்டிருந்தார். வழக்கமான சிரிப்புடனும் பேச்சுடனும் என்னை வரவேற்றார்.

"என்ன இப்படிக் கீழே? நாற்காலி எங்கே?" சுற்று முற்றும் கவனித்தேன். வெற்றிலையின் முதுகில் சுண்ணாம்பைத்தடவிக் கொண்டே என்னை ஆழ்ந்து பார்த்துப் புன்னகை செய்தார். பின்பு அமைதியாக, "அந்தக் காரியத்துக்கே அந்தநாற்காலியை வைத்துக் கொள்ளும்படி நான் கொடுத்துவிட்டேன். அதுக்கும் ஒன்று வேண்டியதுதானே?" என்றார்.

எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. வீட்டுக்குத் திரும்பி வரும்போது இந்தச் செய்தியைச் சொல்லப்பெத்தண்ணா விடம் வேகமாக விரைந்தேன். ஆனால் வரவர என்னுடைய வேகம் குறைந்து தன் நடையாயிற்று.

*****

நன்றி - மதுரைத்திட்டம்

Friday 12 March 2021

புத்தகம் புதிது தினமணி 2021 புத்தக கண்காட்சி

 தினமணி நாளிதழ்  வெளியிட்ட புத்தகம் புதிது பட்டியல் 2021 புத்தக கண்காட்சிக்காக


கண்காட்சியில் அதிகம் விற்ற புத்தகங்கள்


1. அறியப்படாத தமிழ் மொழி - தடாகம் பதிப்பகம்


2. தமிழா சம்ஸ்கிருதமா - தடாகம் பதிப்பகம்


3. தொ ப படைப்பு தொகுப்பு -தொ பரமசிவன் படைப்புகள் - காலச்சுவடு பதிப்பகம்


4. வாடிவாசல் - சி சு செல்லப்பா -காலச்சுவடு பதிப்பகம்


5. அவளது வீடு - எஸ் ராமகிருஷ்ணன் - தேசாந்திரி பதிப்பகம்


6. துணையெழுத்து - எஸ் ராமகிருஷ்ணன் - தேசாந்திரி படிப்பகம்


7. இவன் நம்ம ஆளு - நன்செய் பதிப்பகம் 


8. மண்ணில் உப்பானவர்கள் -தன்னறம் குக்கூ வெளியீடு


9.கடவுளாயினும் ஆக - பாரதி புத்தகாலயம்


10.தண்டிக்கப்பட்ட உறவுகள் - ஆழ்வார் ஆய்வு மையம்


11. இந்திய தேர்தலை எதிர்கொள்வது எப்படி? - எதிர் வெளியீடு 


12. காஃப்கா கடற்கரையில் - எதிர் வெளியீடு


புத்தகம் புதுசு 2021 புத்தக கண்காட்சி 


1. அஞ்சலை அம்மாள் - ராஜா வாசுதேவன் - வாழ்க்கை வரலாறு - தழல் பதிப்பகம் -ரூ 250/


2.  உ வே சாமிநாதையர் கடிதக் கருவூலம் -பதிப்பாசிரியர் ஆ இரா வேங்கடாசலபதி -டாக்டர் உ வே சாமிநாதையர்  நூல் நிலையம் - ரூ 600/


3. நியூட்டன் கடவுளை நம்பியது ஏன் - ஆயிஷா இரா நடராசன் -பாரதி புத்தகாலயம் -ரூ 145/


4. தமிழா சம்ஸ்கிருதமா - முனைவர் கண்ணபிரான் இரவிசங்கர் -தடாகம் பதிப்பகம் - ரூ 180/


5. குட்டி இளவரசனின் குட்டிப்பூ - (இளையோர் நாவல்) - உதயசங்கர் - வானம் பதிப்பகம் ரூ 100/


6. சிட்டு (குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும்) -ஆதி வள்ளியப்பன் - காக்கைக்கூடு - ரூ 90/


7. தமிழ்ப் புதினங்களில் பெண்கள் - ஆண்கள் - சாதிகள் - எம் ஆர் ரகுநாதன் - அலைகள் வெளியீட்டகம் ரூ 900/


8. பெருமகிழ்வின் பேரவை - அருந்ததி ராய் - தமிழில் ஜி குப்புசாமி - காலச்சுவடு பதிப்பகம் -ரூ 550/


9. அரசியல் சிந்தனையாளர் புத்தர் - காஞ்ச அய்லய்யா - தமிழில் அக்களூர் இரவி -எதிர் வெளியீடு - ரூ 350/


10. அழியாத ரேகைகள் - சுதா மூர்த்தி - தமிழில் காயத்ரி ஆர் -எழுத்து பதிப்பகம் -ரூ 250/


11.தமிழகப் பாளையங்களின் வரலாறு - மு கோபு சரபோஜி - கிழக்கு பதிப்பகம் - ரூ 150/


12. தீர்த்த யாத்திரை - எம் கோபாலகிருஷ்ணன் - தமிழினி பதிப்பகம் - ரூ 220/


13. லிங்கம் - ஜெயந்தி கார்த்திக் - உயிர் எழுத்து பதிப்பகம் - ரூ 200/


14. பத்ம வியூகம் - தொகுப்பாசிரியர் சுப்பிரமணி இரமேஷ் - பரிசல் பதிப்பகம் - ரூ 200/


15. ஓவியம் (தேடல்கள், புரிதல்கள்) - கணபதி சுப்பிரமணியம் - யாளி வெளியீடு - ரூ 350/


16. இந்திரா காந்தி ( இயற்கையோடு இயைந்த வாழ்வு ) -ஜெய்ராம் ரமேஷ் - தமிழில் முடவ்ன் குட்டி முகம்மது அலி - காலச்சுவடு பதிப்பகம் - ரூ 295/


17. இனி யாரும் இங்கே அழவேண்டாம் -ஜீயோ டாமின் - பூவுலக நண்பர்கள் - ரூ 40/


18. கல்வி சிக்கல்கள் தீர்வை நோக்கி - சு உமாமகேசுவரி -பன்மைவெளி வெளியீட்டகம் - ரூ 165/


19. முறிந்த அம்புகள் - இந்திரா சௌந்தர்ராஜன் - திருமகள் நிலையம் - ரூ 130/


20. ஆதியிலே நகரமும் நானும் இருந்தோம் - பா ராகவன் - எழுத்து பிரசுரம் - ரூ 200/


21. கோ ஒளிவண்ணன் சிறுகதைகள் - எழிலினி பதிப்பகம் - ரூ 350/


22. மாபெரும் சபைதனில் - உதயச்சந்திரன் - விகடன் பிரசுரம் -- ரூ 300/


23. சின்னக்குடை - அழகிய பெரியவன் - நற்றிணை பதிப்பகம் - ரூ 160/


24. மூன்றடிகளில் மலர்ந்த புறநானூறு - கா நா கல்யாண சுந்தரம் - கவி ஓவியா பதிப்பகம் -ரூ 100/


25. மிச்சக்கதைகள் - கி ராஜநாராயணன் - அன்னம் வெளியீடு - ரூ 300/


26. பண்டைத் தமிழ்ப் பண்பாடு (மானிடவியல் நோக்கில் சங்க இலக்கியம்) - பக்தவத்சல பாரதி -அடையாளம் வெளியீடு - ரூ 350/


27. மணற்கேணி (வள்ளுவர் சொல்லாடல்) - ப மகாதேவன் - பாவாணந்தம் வெளியீட்டகம் -ரூ 150/


28. தன்னைத்தானே வரையும் தூரிகை - கவித்தா சபாபதி -டிஸ்கவரி புக் பேலஸ் - ரூ 100/


29. தமிழ் சினிமா விமர்சனங்கள் (1931-1960) சொர்ணவேல் ஈஸ்வரன், நிழல் திருநாவுக்கரசு - நிழல் பதிப்பகம் -ரூ 590/


30.வேங்கடம் முதல் குமரி வரை - தொ மு பாஸ்கரத்தொண்டைமான் - ஸ்ரீ செண்பகா பதிப்பகம் -ரூ 850/


31.தமிழ்நூல் தொகுப்புக் களஞ்சியம் - சுந்தர சண்முகனார் - மணிவாசகர் பதிப்பகம் - ரூ 650/


32. சுற்றுலா ஆற்றுப்படை - மகுடேசுவரன் - தமிழினி பதிப்பகம் - ரூ 150/


33. மாண்புமிகு விவசாயிகள் - முகில் -வானவில் புத்தகாலயம் - ரூ 177/


34. மிளகு - சந்திரா தங்கராஜ் -எதிர் வெளியீடு - ரூ 170/


35. நெடும்பயணம் - எஸ் ராமகிருஷ்ணன் - க்ரியா பதிப்பகம் - ரூ 140/


36. விடுதலைக்கு முந்தைய தமிழ் சிறுகதைகள் - தேர்வும் தொகுப்பும் அரவிந்த் சுவாமிநாதன் -யாவரும் பதிப்பகம் -ரூ 550/


37. தாய்வழிச்சமூகம் : வாழ்வும் வழிபாடும் - கோ சசிகலா - தடாகம் பதிப்பகம் - ரூ 160/


38. ஹைக்கூ தூண்டிலில் ஜென் - கோ லீலா - படைப்பு பதிப்பக வெளியீடு - ரூ 100/


39. ஒளி வீசும் ரஷ்ய நாவல்கள் -எஸ் ஏ பெருமாள் -ஏ எம் புக் ஹவுஸ் - ரூ 160/


Wednesday 10 March 2021

கவனிக்க வேண்டிய புத்தகங்கள் 2021 புத்தகக் கண்காட்சி

  இந்து தமிழ் நாளிதழ் புத்தக கண்காட்சி 2021 நாட்களில் புத்தக பரிந்துரைகளை வெளியிட்டு வந்தது. கவனிக்க வேண்டிய புத்தகங்கள் என்ற தலைப்பில் ஐந்து புத்தகங்களை வெளியிட்டு வந்தது. ஆஹா ! மற்றும் இந்த புத்தகம் உங்களிடம் இருக்கிறதா ? என்ற தலைப்பில் தினம் ஒரு புத்தகம் பற்றி குறிப்புகளுடன் வெளியிட்டு வந்தது. அவற்றின் தொகுப்பு இது.



கவனிக்க வேண்டிய புத்தகங்கள் 2021 புத்தகக் கண்காட்சி 


1.தேவார மாண்பும் ஓதுவார் மரபும் - குடவாயில் பாலசுப்ரமணியன் , அன்னம் வெளியீடு - ரூ 800/


2. இந்தியாவின் மனசாட்சிக்கு ஒரு வேண்டுகோள் - வி ஆர் கிருஷ்ணய்யர் - தமிழில் சம்பத் ஸ்ரீனிவாசன் - சோக்கோ அறக்கட்டளை வெளியீடு ரூ 100/


3. தீர்த்த யாத்திரை - எம் கோபாலகிருஷ்ணன் - தமிழினி வெளியீடு  ரூ 220/


4. மண்ணில் உப்பானவர்கள் - சித்ரா பாலசுப்ரமணியன் - தன்னறம் வெளியீடு - ரூ 200/


5.இஸ்ரோவின் கதை - ஹரிஹர சுதன் தங்கவேலு - கிழக்கு வெளியீடு - ரூ 170/


6. முகமூடிகளின் பள்ளத்தாக்கு - தருண் ஜே தேஜ்பால் - தமிழில் சாருநிவேதிதா, தாமரைச்செல்வி - எழுத்து பிரசுரம் வெளியீடு - ரூ 600/


7. சின்னக்குடை - அழகிய பெரியவன் - நற்றிணை வெளியீடு - ரூ 160/


8. மாயவரம் சில நினைவுகளும் சில நிகழ்வுகளும் - சந்தியா நடராஜன் - சந்தியா வெளியீடு - ரூ 220/


9. பத்ம வியூகம் - தொகுப்பாசிரியர் - சுப்பிரமணி இரமேஷ்  - பரிசல் வெளியீடு ரூ- 200/


10. திருமதி பெரேரா - இஸுரு சாமர சோமவீர - தமிழில் எம் ரிஷான் ஷெரீப் - ஆதிரை வெளியீடு - ரூ 140/


11.மிச்சக் கதைகள் - கி ராஜநாராயணன் - அன்னம் வெளியீடு - ரூ 300/


12. தமிழ் நாட்டுப்புறவியல் - டி தருமராஜ் - கிழக்கு வெளியீடு ரூ 250/


13. சந்திப்பு - மாக்சிம் கார்க்கி - தமிழில் தொ மு சி ரகுநாதன் தேநீர் வெளியீடு - ரூ 100/


14. இந்தியத் தேர்தல்களை வெல்வது எப்படி - சிவம் சங்கர் சிங் - தமிழில் இ பா சிந்தன் - எதிர் வெளியீடு ரூ 320/


15. அன்றாட அறிவியல் - ஹாலாஸ்யன் - யாவரும் வெளீயீடு - ரூ 120/


16.வைத்தியர் அயோத்திதாசர் - ஸ்டாலின் ராஜாங்கம் - நீலம் வெளியீடு - ரூ 175/


17. இப்படியும் தாலாட்டுப் பாடினார்கள் - தொகுப்பாசிரியர் பா ரா சுப்பிரமணியன் - மொழி &சந்தியா பதிப்பகம் ரூ 90/


18. சாலாம்புரி - அ வெண்ணிலா - அகநி வெளியீடு - ரூ 400/


19. ஆணின் சிரிப்பு - தேர்வும் மொழிபெயர்ப்பும் அனுராதா ஆனந்த் - சால்ட் & தன்னறம் வெளியீடு - ரூ 150/


20. தாய் வழிச்சமூகம் - வாழ்வும் வழிபாடும் - கோ சசிகலா - தடாகம் வெளியீடு - ரூ 160/


21. தமிழக வரலாற்றில் ஊரும் சேரியும் - பக்தவத்சல பாரதி - பாரதி புத்தகாலயம் வெளியீடு ரூ 80/


22. அழகிய இந்தியா - தரம் பால் தமிழில் பி ஆர் மகாதேவன் - கிழக்கு வெளியீடு ரூ 300/


23. குமிழ் - ரவி - விடியல் வெளியீடு - ரூ 180


24. அரூ அறிவியல் சிறுகதைகள் 2020 - எழுத்து பிரசுரம் வெளியீடு - ரூ 320/


25. விடாய் - தில்லை -  தாயதி வெளியீடு - ரூ 90


26. ஓணம் பண்டிகை :பௌத்த பண்பாட்டு வரலாறு - அருள் முத்துக்குமரன் -நீலம் வெளியீடு ரூ-175/


27. தெருக்களே பள்ளிக்கூடம் - ராகுல் அல்வரிஸ் - தமிழில் சுஷில்குமார் - தன்னறம் வெளியீடு - ரூ 200/


28. பொருளாதாரம் பற்றி என் மகளுக்கு அளித்த விளக்கம் - யானில் வருஃபாகில்  தமிழில் எஸ் வி ராஜதுரை - க்ரியா வெளியீடு - ரூ 275/


29. பூஜ்ய விலாசம் - நெகிழன் - மணல்வீடு வெளியீடு  - ரூ 80/


30. வாழ்க்கை வாழ்வதற்கே - மேட் ஹெயிக் தமிழில் பி எஸ் வி குமாரசாமி - மஞ்சுள் வெளியீடு - ரூ 225/


31. மூமின் - ஷோபாசக்தி - கருப்பு பிரதிகள் வெளியீடு - ரூ 250/


32. திராவிட ஆட்சி : மாற்றமும் வளர்ச்சியும் - ஜெ ஜெயரஞ்சன் - தமிழில் பா பிரவின்ராஜ் கயல் கவின் வெளியீடு ரூ 350/


33. ஆறாவது பெண் - சேது - தமிழில் குறிஞ்சி வேலன் - அகநி வெளியீடு ரூ 200/


34. சூழலும் சாதியும் - நக்கீரன் - காடோடி வெளியீடு - ரூ 80/


35. பம்மல் சம்பந்தனார் - பதிப்பு கோ பழனி - புலம் வெளியீடு ரூ 200/


36.நியூட்டன் கடவுளை நம்பியது ஏன் ?  ஆயிஷா நடராஜன் - புக் ஃபார் சில்ரன் வெளியீடு ரூ 145/


37. மேகலை சுதா - தேவகாந்தன் - பூபாலசிங்கம் பதிப்பகம் ரூ 200/


38. பிரெஞ்சியர் ஆட்சியில் புதுச்சேரி மக்களின் சமூக வாழ்க்கை -எஸ் ஜெயசீல ஸ்டீபன் - தமிழில் கி இளங்கோவன் - என் சி பி ஹெச் வெளியீடு - ரூ 160/


39. உன் சின்ன உலகத்தைத் தாறுமாறாகத்தான் புணர்ந்திருக்கிறாய் - பெருந்தேவி - உயிர்மை வெளியீடு ரூ 110


40. காலநிலை மாற்றத்தின் புதிய குழந்தை கொரோனா - பூவுலகின் நண்பர்கள் - ரூ 80/


41. இராஜேந்திர சோழன் : தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - தொகுப்பு - பா இரவிக்குமார், புதுவை சீனு தமிழ்மணி - டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு - ரூ 300/


42. பேரருவி - கலாப்ரியா - சந்தியா பதிப்பகம் ரூ 270/


43. ஓலம் - சரண்குமார் லிம்பாலே - தமிழில் ம மதிவண்ணன் - கருப்பு பிரதிகள் வெளியீடு - ரூ 240/


44.பெருங்காம நல்லூர் போராட்டம் நூற்றாண்டு நினைவுகள் - தொகுப்பு : அ.கா.அழகர்சாமி, அ.செல்வப்பிரீத்தா - கருத்து = பட்டறை வெளியீடு ரூ 220/


45. கையறு - கோ புண்ணியவான் - விற்பனை உரிமை  பி ஃபார் புகஸ் ரூ 400/


46. பண்டைத் தமிழ் சமூகத்தில் இறந்தோர் வழிபாடும் முன்னோர் வழிபாடும் - ஆ சிவசுப்ரமணியன் என் சி பி ஹெச்  ரூ 145/ 


47. கொனஷ்டை படைப்புகள் - தொகுப்பாசிரியர் ராணி திலக் - எழுத்து பிரசுரம் வெளியீடு - ரூ 370/


48. வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் (3 பாகங்கள்)- பெ சிவசுப்ரமணியம் - சிவா மீடியா வெளியீடு - ரூ 1300/


49. கோடி முனை முதல் ஐ நா சபை வரை - தொகுப்பு - வறீதையா கான்ஸ்தந்தின் - புலம் வெளியீடு - ரூ 150/


50. வடசென்னை வரலாறும் வாழ்வியலும் - நிவேதிதா லூயிஸ் - கிழக்கு வெளியீடு - ரூ 300/


51. இது கறுப்பர்களின் காலம் - தொகுப்பும் பெயர்ப்பும் - சிவசங்கர் எஸ் ஜே -நீலம் வெளியீடு - ரூ 125/


52. கடலில் எறிந்தவை - யுவன் சந்திரசேகர் - எழுத்து பிரசுரம் வெளியீடு - ரூ 260/


53. மொழியாகிய தமிழ் - காலனியம் நிகழ்த்திய உரையாடல் - ந கோவிந்தராஜன் - க்ரியா வெளியீடு - ரூ 450/


54. பாலபாரதி கவிதைகள் - பாலபாரதி - நம் பதிப்பக வெளியீடு - ரூ 170/


55. விடுபட்டவர்கள் : இவர்களும் குழந்தைகள் தான் - இனியன் - நாடற்றோர் பதிப்பக வெளியீடு - ரூ 140/


ஆஹா!


1. கேள்விகளின் புத்தகம் - பாப்லோ நெருதா - தமிழில் பிரம்மராஜன் - சொற்கள் வெளியீடு - ரூ 425/


2. விரிசல் கண்ணாடி - கோபால் குரு, சுந்தர் சருக்கை தமிழில் சீனிவாச ராமாநுஜம் -எதிர் வெளியீடு - ரூ 450/


3. க்ரியா தற்காலத் தமிழ் அகராதி - க்ரியா வெளியீடு - ரூ 895/


4.பத்து இரவுகளின் கனவுகள் - நாட்சுமே சொசெகி - தமிழில் கணேஷ்ராம் - நூல்வனம் வெளியீடு - ரூ 150/


5. குறுநூல் வடிவில் வீ அரசு ஆய்வுரைகள் - தடாகம் வெளியீடு - மொத்த விலை -ரூ 440/


6. காஃப்கா-கடற்கரையில் -ஹருகி முரகாமி - தமிழில் கார்த்திகைப்பாண்டியன் -எதிர் வெளியீடு - ரூ900/


7.விடுதலைக்கு முந்தைய தமிழ் சிறுகதைகள் - தேர்வும் தொகுப்பும் - அரவிந்த் சுவாமிநாதன் - யாவரும் வெளியீடு - ரூ 550/


8.பண்டைத் தமிழ்ப் பண்பாடு &தமிழர் பண்பாட்டு வரலாறு இன வரலாறு - பக்தவத்சல பாரதி -அடையாளம் வெளியீடு ரூ 410/


9. தே :ஒரு இலையின் வரலாறு - ராய் மாக்ஸம் தமிழில் சிறில் அலெக்ஸ் - கிழக்கு வெளியீடு 


10. இந்தியா அடிமைப்படுத்தப்பட்ட வரலாறு -ராய் மாக்ஸம் தமிழில் சிறில் அலெக்ஸ் - கிழக்கு வெளியீடு  இரண்டு நூல்களும் ரூ 650/


11. நீதி பற்றிய கோட்பாடு - அமார்த்திய சென் - தமிழில் க பூரணச்சந்திரன் -எதிர் வெளியீடு - ரூ 750/



உங்களிடம் இருக்கிறதா இந்த புத்தகம் ?


1. தமிழ்ப் புதினங்களில் பெண்கள் - ஆண்கள் - சாதிகள் - எம் ஆர் ரகுநாதன் - அலைகள் வெளியீட்டகம் - ரூ 900/


2. கொங்குதேர் வாழ்க்கை -2 -தொகுப்பாசிரியர் ராஜமார்த்தாண்டன் - தமிழினி வெளியீடு - ரூ 990


3. தென்னாட்டுப் போர்க்களங்கள் வீழ்ச்சியும் மாட்சியும் - கா அப்பாதுரை- அழகு பதிப்பக வெளியீடு ரூ 500/


4. ஒரு கூர்வாளின் நிழலில் - தமிழினி - யாழ் நூல் வெளியீடு - ரூ 220/


5. உலக மக்களின் வரலாறு - கிரிஸ் ஹார்மன் - தமிழில் நிழல்வண்ணன் - என் சி பி ஹெச் வெளியீடு ரூ 750/

 

6. தஞ்சை ப்ரகாஷ் சிறுகதைகள் - தஞ்சை ப்ரகாஷ்   - தொகுப்பு பொன் வாசுதேவன் -டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு ரூ 400/


7.இரண்டு வார்த்தைகளும் மூன்று துறவிகளும் - ஆர் சிவக்குமார் - பாதரசம் வெளியீடு - ரூ 275/


8. சித்ர சூத்திரம் - தமிழில் அரவக்கோன் - அனன்யா வெளியீடு - ரூ 140/


9. ஒரு நல்ல வறட்சியை எல்லோரும் நேசிக்கிறார்கள் - பி சாய்நாத் தமிழில் ஆர் செம்மலர் - பாரதி புத்தகாலயம் வெளியீடு - ரூ 550/


10. தொல்லியல் -தமிழர் வரலாற்றுத்தடங்கள் - தொகுப்பாசிரியர்கள் ந இரத்தினக்குமார் , பெ க பெரியசாமி ராஜா - கருத்து= பட்டறை வெளியீடு ரூ 300/


Monday 22 February 2021

சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை -8

 

சிறந்த சிறுகதைகள் பற்றிய இந்த கட்டுரையில் வாசகசாலை நடத்திய கூட்டங்களில் பேசப்பட்ட சிறுகதைகள், யூடியூபில் வலையேற்றப்பட்ட சிறுகதைகள் முகநூலில் பேசப்பட்ட சிறுகதைகள், திலீப்குமாரின்  தமிழ் சிறுகதைகளின் ஆங்கில தொகுப்பில் உள்ள சிறுகதைகள், பாட்காஸ்டில் பதிவு செய்யப்பட்டுள்ள சிறுகதைகள், புதிய பார்வை சிறுகதைகள், பேசும் புத்தகம் என்ற தலைப்பில் புக்டே இணைய தளத்தில் வந்த முக்கிய சிறுகதைகள், கதையியல் என்ற நூலில் க பூரணச்சந்திரன் குறிப்பிடும் சிறுகதைகள், புது எழுத்து தமிழ் சிறுகதைகள் என்ற நேஷனல் புக் ட்ரஸ்ட் வெளியிட்ட தொகுப்பில் உள்ள சிறுகதைகள், தமிழ் இலக்கிய வரலாறு என்னும் நூலில் எஸ் ஸ்ரீகுமார் சிறந்த சிறுகதைகளாகக் குறிப்பிடும் சிறுகதைகள் , தமிழில் தவிர்க்க முடியாத சில சிறுகதைகள் என்று தமிழ்மகன் விகடன் இயர்புக்கில் குறிப்பிடும் சிறுகதைகள் ஆகியவற்றை குறிப்பிட்டு இருக்கிறேன். இன்னும் சில சிறுகதை தொகுப்புகள் வெளிவந்துள்ளன.அவற்றை அடுத்த கட்டுரையில் காணலாம்.

 

 

வாசகசாலை பல்வேறு மாவட்டங்களில் மாதக்கூட்டம் நடத்தியது. அதில் பேசப்பட்ட கதைகள்

 

1.துன்பக்கேணி - புதுமைப்பித்தன்  2. மஹாராஜாவின் ரயில்வண்டி - அ முத்துலிங்கம்   3. அவற்றின் கண்கள் - பா திருச்செந்தாழை 4. ஊரில் இப்போது வேனிற்காலம் - அழகிய பெரியவன்    5. வலி- கலைசெல்வி    6. நான் அவன் அது - கவிதா சொர்ணவல்லி 7. பகல் உறவுகள் - ஜெயந்தன்   8. வெள்ளைச்சேவலும் தங்கப்புதையலும் - கி ரா   9. துரோகம் - சோ தர்மன் 10. வேட்டை - பவா செல்லதுரை   11. மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்   12. தாவரங்களின் உரையாடல் - எஸ் ராமகிருஷ்ணன் 13. பிரும்மம் - பிரபஞ்சன்  14. ஆத்மாநாமிற்கும் குமாரசாமிக்குமான இடைவெளி -எஸ் ரா      15. பாதுகை – பிரபஞ்சன்  16. வேனல் தெரு - எஸ் ராமகிருஷ்ணன்   17. வீம்பு -இமையம்    18. காட்டில் ஒரு மான் - அம்பை  19. தடயம் - பா செயப்பிரகாசம்   20. காட்டில் ஒரு மான் - அம்பை  21. நிலை – வண்ணதாசன் 22. கோடை மழை - பிரபஞ்சன்    23. மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்    24. பேராசை – இமையம் 25. கடவுளும் கந்தசாமி பிள்ளையும் - புதுமைப்பித்தன்    26. புலிக்கலைஞன் - அசோகமித்திரன்  27. அக்ரகாரத்துப்பூனை – ஜெயகாந்தன் 28. குந்தியின் தந்திரம் - அ முத்துலிங்கம்   29. முன் நிலவும் பின் பனியும் - ஜெயகாந்தன்    30.மரி என்கிற ஆட்டுக்குட்டி – பிரபஞ்சன் 31. கோகிலவாணியை யாருக்கும் நினைவிருக்காது - எஸ் ரா   32. அனந்த சயனம் காலணி - தோப்பில் முகம்மது மீரான் 33. வேகாத கட்டை - மேலாண்மை பொன்னுச்சாமி  34. அந்நியர்கள் - ஆர் சூடாமணி      35. நகரம் - சுஜாதா      36. தூசி - ராஜம் கிருஷ்ணன் 37. இருவர் கண்ட ஒரே கனவு - கு அழகிரிசாமி    38. சோற்றுக்கணக்கு - ஜெயமோகன்  39. பஞ்சத்து ஆண்டி - தி ஜானகிராமன் 40. சித்தாள் சாதி - மேலாண்மை பொன்னுச்சாமி  41. விட்டு விடுதலையாகி - பாமா  42. வாகனம் பூக்கும் சாலை -அழகிய பெரியவன் 43.கனவுக்கதை - சார்வாகன்    44. நீர்மை - ந முத்துசாமி 45. தக்கையின் மீது நான்கு கண்கள் - சா கந்தசாமி 46. ராஜா வந்திருக்கிறார் - கு அழகிரிசாமி      47. மரப்பாச்சி- உமா மகேஸ்வரி        48. கதவு - கி ராஜநாராயணன் 49. தாம்பரம் சந்திப்பு - பாஸ்கர் சக்தி     50. கதவு - கி ராஜநாராயணன்    51. முள்வேலி – பாமா 52. பிணக்கு - ஜெயகாந்தன்    53. நூருன்னிசா - கு ப ராஜகோபாலன்     54. பிரியம்னா அப்படி ஒரு பிரியம் - கி ரா 55. பாவனைகள் - ச தமிழ்செல்வன்    56. காதல் மேஜை - எஸ் ராமகிருஷ்ணன்   57. வரம் - சோ தர்மன் 58. அடமானம் - சோ தர்மன்       59. சோகவனம் - சோ தர்மன்       60. சிவப்பா உயரமா மீசை வச்சுக்காமல் – ஆதவன் 61. உனக்கு 34 வயதாகிறது - எஸ் ரா  62. பூமாலை - ஆர் சூடாமணி    63. ஒரு கப் காப்பி - இந்திரா பார்த்தசாரதி 64. பைத்தியக்காரப் பிள்ளை - எம் வி வெங்கட் ராம் 65. விடிவதற்கு முன் - அசோகமித்திரன்  66. சுமைதாங்கி – ஜெயகாந்தன் 67. காஞ்சனை - புதுமைப்பித்தன்   68. கோமதி - கி ராஜநாராயணன்    69. ஹசார் தினார் - எஸ் ராமகிருஷ்ணன் 70. முள்முடி - தி ஜானகிராமன்    71. அன்பளிப்பு - கு அழகிரிசாமி     72. போட்டி – பூமணி 73. செவ்வாழை - அண்ணாதுரை     74. சூது நகரம் - சந்திரா     75.  முதல் மனைவி - சுஜாதா 76. நீலவேணி டீச்சர் - நாஞ்சில் நாடன்   77.நேர்த்திக்கடன் - வாஸந்தி   78. மைதானத்து மரங்கள் – கந்தர்வன் 79. நிழலும் நிஜமும் -  பாமா      80. கொக்கரக்கோ - அண்ணாதுரை    81. இணைப்பறவை - ஆர் சூடாமணி 82. பாஸ்வோர்ட் - தமிழ்மகன்      83. மரப்பாச்சி - உமா மகேஸ்வரி     84. தவுட்டுக்குருவி – பாமா 85. அனந்த சயனம் காலணி - தோப்பில் முகம்மது மீரான்   86. அலர் - தமயந்தி    87. நூறு நாற்காலிகள் – ஜெயமோகன் 88.மேபல் - தஞ்சை ப்ரகாஷ்     89. தோப்பு - அழகிய பெரியவன்     90. மரி என்கிற ஆட்டுக்குட்டி – பிரபஞ்சன் 91. மதினிமார்கள் கதை - கோணங்கி   92. நிற்காத கால் - தோப்பில் முகம்மது மீரான்   93. காலத்தின் ஆவர்த்தனம் - தோப்பில் முகம்மது மீரான் 94. கலைத்து எழுதிய சித்திரம் - கீரனூர் ஜாகிர்ராஜா   95. விகாசம் - சுந்தர ராமசாமி    96 . இருவேறு உலகம் இதுவென்றால் - எம் ஏ சுசீலா 97. குவளையின் மிச்சம்- க சீ சிவக்குமார்      98. கன்னிமை - கி ராஜநாராயணன்      99. பாதுகை - பிரபஞ்சன் 100. நாற்காலி - கி ராஜநாராயணன்    101. சேச்சா - சுஜாதா     102. தண்ணீர் – கந்தர்வன் 103. விடிவதற்கு முன் - அசோகமித்திரன்   104. சத்ரு - பவா செல்லதுரை     105. ரத்தசுவை - கரிச்சான் குஞ்சு 106. அடமானம்  சோ தர்மன்     107. வெயிலோடு போய் - ச தமிழ்ச்செல்வன்       108. வேட்டை - பவா செல்லதுரை 109. வனம்மாள் - அழகிய பெரியவன்   110. சிலிர்ப்பு - தி ஜானகிராமன் 111. வெளிய - அ வெண்ணிலா  112. சோற்றுக்கணக்கு - ஜெயமோகன்    113. மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்    114. மரப்பாச்சி - உமா மகேஸ்வரி 115. அரசுப்பள்ளியில் ஒரு நாள் - இமையம்   116. பூமாலை - ஆர் சூடாமணி      117. கனகாம்பரம் - கு ப ராஜகோபாலன்  118. நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை - பவா செல்லதுரை   120. நிலை - வண்ணதாசன்       121. அனந்த சயனம் காலணி - தோப்பில் முகம்மது மீரான்    122.ஆனைக்கிணறு தெரு - உதயசங்கர்   123. தவுட்டுக்குருவி - பாமா     124.  என்ன சொல்கிறாய் சுடரே - எஸ் ராமகிருஷ்ணன் 125. சூது நகரம் -  சந்திரா    126. சாலமிகுத்துப்பெயின் - பா ராகவன்    127. தக்கையின்மீது நான்கு கண்கள் - சா கந்தசாமி  128.அப்பாவின் சைக்கிள் - பாவண்ணன்   129. நேர்த்திக்கடன் - வாஸந்தி    130. பாச்சி - ஆ மாதவன் 131. பக்கத்து வீடு - வெ இறையன்பு      132. சாசனம் - கந்தர்வன்      133. இருளப்ப சாமியும் 21 கிடாய்களும் - வேல ராமமூர்த்தி  134. வெயிலோடு போய் - ச தமிழ்ச்செல்வன்   135. மரப்பாச்சி - உமா மகேஸ்வரி    136. தாலியில் பூச்சூடியவர்கள் - பா செயப்பிரகாசம் 135. மேபல் - தஞ்சை ப்ரகாஷ்    136. இருள் - சல்மா        138. உத்தியோக ரேகை - சார்வாகனன்   139.பாம்பும் பிடாரனும் - வண்ணநிலவன்     140. ஆனைக்கிணறு - உதயசங்கர்       141. ராஜா வந்திருக்கிறார் - கு அழகிரிசாமி 142. மேபல் - தஞ்சை ப்ரகாஷ்        143. பைத்தியக்காரப்பிள்ளை - எம் வி வெங்கட் ராம்    144. கடற்கரையில் புதுவித ஜோடி - ஆர் சூடாமணி 145. பெத்தவன் - இமையம்         146. முள் - சாருநிவேதிதா     147. தவுட்டுக்குருவி - பாமா  148. அக்கினிப்பிரவேசம் - ஜெயகாந்தன்  149. மாண்புமிகு மாணவன் - அய்க்கண்    150. பிம்பம் - லா ச ரா 151.வைராக்கியம் - சிவசங்கரி      152. செவ்வாழை - அண்ணாதுரை      153. ரீதி - பூமணி   154. நட்சத்திரக்குழந்தைகள் - பி எஸ் ராமையா    155. கடிதம் - திலீப்குமார்     156. சுயதரிசனம் – ஜெயகாந்தன் 157. பிரயாணம் - அசோகமித்திரன்      158. சோகவனம் - சோ தர்மன்     159. அடமானம் - சோ தர்மன் 160. வரம் - சோ தர்மன்     161. அப்பாவின் வேஷ்டி - பிரபஞ்சன்     162. எஸ்தர் – வண்ணநிலவன்  163. கடிதம் - திலீப்குமார்       164. தீர்ப்பு - வாஸந்தி       165. வனம்மாள் - அழகிய பெரியவன்   166.மருமகள் வாக்கு - கிருஷ்ணன் நம்பி  

 

பெங்களூரு வாசகசாலையில் பேசப்பட்ட முக்கிய சிறுகதைகள்

 

1.மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்      2. ஒரு மனுஷி        3. அப்பாவின் வேஷ்டி 4. கதவு  - கி ராஜநாராயணன்      5. பெத்தவன் - இமையம்      6. யானையின் சாவு – சார்வாகன் 7. ஓடிய கால்கள் - ஜி நாகராஜன்   8. மருமகள் வாக்கு - கிருஷ்ணன் நம்பி   9. நாயனம் - ஆ மாதவன் 10.டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர் - ஜி நாகராஜன்  11. வணங்கான் - ஜெயமோகன்     12. பிலோமி டீச்சர்- வா மு கோமு 13. எஸ்தர் - வண்ணநிலவன்      14. ஆண்களின் படித்துறை - ஜே பி சாணக்யா    15. கோப்பம்மாள் – கோணங்கி 16.கருப்பு ரயில் - கோணங்கி       17. பால்மணம் - கோமகள்     18. 18. பிழை - ஜெயமோகன் 19. வலி - பவா செல்லதுரை   20. பள்ளம் - சுந்தர ராமசாமி   21. முள் - பாவண்ணன் 22. காட்டில் ஒரு மான் - அம்பை    23. கனகாம்பரம் - கு ப ராஜகோபலன்   24. முள் – சாருநிவேதிதா 25. தாயாரின் திருப்தி - கு ப ராஜகோபாலன்   26. நூறு நாற்காலிகள் - ஜெயமோகன்    27. நிலம் எனும் நல்லாள் - அ முத்துலிங்கம் 28. ஒரு ராத்தல் இறைச்சி - நகுலன்       29. புலிக்கலைஞன்- அசோகமித்திரன்     30. தக்கையின் மீது நான்கு கண்கள் - சா கந்தசாமி  31.கடவுளும் கந்தசாமி பிள்ளையும் - புதுமைப்பித்தன்     32. வனம்மாள் - அழகிய பெரியவன்  33. கனவுக்கதை – சார்வாகன் 34. வரம் - சோ தர்மன்     35. சோற்றுக்கணக்கு - ஜெயமோகன்    36. பஞ்சத்து ஆண்டி - தி ஜானகிராமன்  37. வீட்டின் மூலையில் ஒரு சமையலறை- அம்பை   38. வல்விருந்து - நாஞ்சில் நாடன்  

 

 

என்னைக் கவர்ந்த  சிறுகதைகள் : முகநூல் பக்கத்தில் பகிரப்பட்ட சிறுகதைகள்

 

 சுரேஷ் சுப்ரமணி

 

1.புலிக்கலைஞன்- அசோகமித்திரன்   2. முன் நிலவும் பின் பனியும் - ஜெயகாந்தன்   3. கடிதம் -திலீப் குமார் 4.மரி என்னும் ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்   5. அறம் - ஜெயமோகன்   6. பிரசாதம் – பாவண்ணன் 7.குதிரைகள் பேச மறுக்கின்றன - எஸ் ராமகிருஷ்ணன்  8. கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன்  9. கதவு - கி ராஜநாராயணன் 10.மஹாராஜாவின் ரயில் வண்டி - அ முத்துலிங்கம்   11. நகரம் - சுஜாதா

 

 சரவணன் மாணிக்கவாசகம்

 

1.கல்யாணி - புதுமைப்பித்தன்   2. ஆற்றாமை - கு ப ராஜகோபாலன்     3. கபோதி - ந பிச்சமூர்த்தி 4. சாமியார் ஜூவுக்குப் போகிறார் - சம்பத்   5. சிலிர்ப்பு - தி ஜானகிராமன்  6.அன்பளிப்பு - கு அழகிரிசாமி 7.பிரபஞ்சகானம் - மௌனி     8. ரத்னாபாயின் ஆங்கிலம் - சுந்தர ராமசாமி  9. இந்த மரம் சாட்சியாக நானும் இவர்களும் – ஆதவன் 10.திருப்பம் - அசோகமித்திரன்

 

பாஸ்கரன் ஜெயராமன்

 

1. திரை - கு ப ராஜகோபாலன்     2. கோதாவரி குண்டு - தி ஜானகிராமன்   3. எலி – அசோகமித்திரன் 4.ஆராய்ச்சி - ந பிச்சமூர்த்தி       5. அடைக்கலம் - சுந்தர ராமசாமி      6. ஆடு புலி - லா ச ராமாமிர்தம் 7.அற்றது பெற்றெனில் - இந்திரா பார்த்தசாரதி  8.எல்லோருந்தான் கெட்டவா - ஜெயபாரதி  9. அம்மிணி - ஸிந்துஜா  10.கடிகாரம் - நீலபத்மநாபன்    11. நான்காம் ஆசிரமம் = சூடாமணி     12. பார்வை - சுஜாதா

 

கலையரசி பாண்டியன்

 

1.வீட்டின் மூலையில் ஒரு சமையலறை - அம்பை  2. அம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை   3. ராஜா வந்திருக்கிறார் - கு அழகிரிசாமி 4.ஜடாயு - கி ராஜநாராயணன்   5. பாயசம் - தி ஜானகிராமன்    6. சோற்றுக்கணக்கு - ஜெயமோகன் 7. தங்க வயல் - தோப்பில் முகம்மது மீரான்  8. நசுக்கம் - சோ தர்மன்    9. நீர் விளையாட்டு - பெருமாள் முருகன் 10. பிரும்மம் - பிரபஞ்சன்

 

 நரேந்திரகுமார்

 

1.சாமியாரும் மணப்பெண்ணும் - அசோகமித்திரன்     2. நந்தவனத்தில் ஓர் ஆண்டி- ஜெயகாந்தன்   3. ஒரு கப் காப்பி - இந்திரா பார்த்தசாரதி 4.ராஜா வந்திருக்கிறார் - கு அழகிரிசாமி     5. முள்முடி - தி ஜானகிராமன்    6. புர்ரா - எஸ் ராமகிருஷ்ணன்  7. கேதாரியின் தாயார் - கல்கி   8. கதவு - கி ராஜநாராயணன்      9. பிரும்மம் – பிரபஞ்சன் 10.ஜன்னல் - சுந்தர ராமசாமி    11. ரேணுகா - சுஜாதா

 

காமாராஜ் எம் ராதாகிருஷ்ணன்

 

1. யானை டாக்டர் - ஜெயமோகன்    2. சிலிர்ப்பு - தி ஜானகிராமன்   3. பால்வண்ணம் பிள்ளை – புதுமைப்பித்தன் 4. முள் - சாரு நிவேதிதா    5. அப்பாவின் சைக்கிள் - பாவண்ணன்     6. அமீ காணார் - நாஞ்சில் நாடன் 7. பாயசம் - தி ஜானகிராமன்   8. குருபீடம் - ஜெயகாந்தன்       9. உஞ்சவிருத்தி - சுஜாதா  10. சிறுமி கொண்டு வந்த மலர் -விமலாதித்த மாமல்லன்

 

போஜே போஜன்

 

1.சட்டை - ஜெயகாந்தன்    2. பால்வண்ணம் பிள்ளை - புதுமைப்பித்தன்    3. சபேசன் காபி – ராஜாஜி 4. முக்கப்பிள்ளை வீட்டு விருந்து - வல்லிக்கண்ணன்    5. யானை டாக்டர் - ஜெயமோகன்   6. சிற்றிதழ் - எஸ் ராமகிருஷ்ணன்

 

மிகச்சிறந்த சிறுகதைகளாக யாழினி முனுசாமி முகநூல் பக்கத்தில் பகிரப்பட்ட சிறுகதைகள்

 

1.கரண்ட் - கி ராஜநாராயணன்   2. இரவுகள் உடையும் - சூர்யதீபன்    3. காஞ்சனை – புதுமைப்பித்தன் 4. ஆண்களின் படித்துறை - ஜே பி சாணக்யா    5. பிரும்மம் - பிரபஞ்சன் (செந்தூரம் ஜெகதீஸ்)   6. துன்பக்கேணி – புதுமைப்பித்தன் 7.விடியுமா ? - கு ப ராஜகோபாலன்   8. நட்சத்திரக்குழந்தைகள் - பி எஸ் ராமையா  9. வானம்பாடி - ந பிச்சமூர்த்தி 10.கல்லுக்குள் தேரை - ஆர் சண்முகசந்தரம்  11. அன்பளிப்பு - கு அழகிரிசாமி   12. தேவன் வருவாரா – ஜெயகாந்தன் 13.அக்பர் சாஸ்திரி - தி ஜானகிராமன்    14. காலமும் ஐந்து குழந்தைகளும் - அசோகமித்திரன்   15. டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழம் வேட்டியும் அணிந்த மனிதர் - ஜி நாகராஜன் 16. ஐந்து ரூபாயும் அழுக்கு சட்டைக்காரரும் – திலீப்குமார் 17. வீடுபேறு - மா அரங்கநாதன்     18. ஒவ்வாத உணர்வுகள் - கோபி கிருஷ்ணன்   19. அறியாத முகங்கள் - விமலாதித்த மாமல்லன் 20. தனபாக்கியத்தின் ரவ நேரம் - ராஜேந்திர சோழன்    21. வயிறுகள் - பூமணி     22. எஸ்தர் - வண்ணநிலவன் (ஆசு சுப்ரமணியன்) 23. கன்னிமை - கி ராஜநாராயணன்    24. வேர்கள் தொலைவி லிருக்கின்றன - பாவண்ணன்  25. நொண்டிப்பிள்ளையார் – ஜெகசிற்பியன் 26.சுயரூபம் - மேலாண்மை பொன்னுச்சாமி   27. குருபீடம் - ஜெயகாந்தன்  28. ஆயுதம் - மாலன்   29. ராஜா வந்திருக்கிறார் - கு அழகிரிசாமி 30.பலாப்பழம் - வண்ணநிலவன்    31. கவர்னர் வண்டி -கல்கி   32. வீட்டின் மூலையில் ஒரு சமையலறை - அம்பை 33. எஸ்தர் - வண்ணநிலவன் (பூங்குன்ற பாண்டியன்)  34. நகரம் - சுஜாதா       35. ரீதி - பூமணி     36.பிரும்மம் - பிரபஞ்சன்  (செங்கான் கார்முகில்)37.பொன்னகரம் - புதுமைப்பித்தன்    38. கோயில் மாடும் உழவு காளையும் - சுந்தர ராமசாமி   39. நிலை - வண்ணதாசன் (செங்கான் கார்முகில்) 40. சிலுவை - ஜெயகாந்தன்    41. சீவன் - கந்தர்வன்     42. துண்டு - கந்தர்வன்     43. சாசனம் - கந்தர்வன்  44. செல்லம்மாள் - புதுமைப்பித்தன்    45. மருமகள் வாக்கு - கிருஷ்ணன் நம்பி     46.நந்தனார் தெரு - விழி பா இதயவேந்ன் 47. சர்டிபிகேட் - அன்பாதவன்   48. குறடு - அழகிய பெரியவன்     49. அம்மா - இமையம்  50. நிலை - வண்ணதாசன் (குறிஞ்சி பிரபா)     51. காஞ்சனை - புதுமைப்பித்தன்   52.தாவரங்களின் உரையாடல் - எஸ் ராமகிருஷ்ணன்

 

ராம்ஸ்.தேக்கம்பட்டு பாட்காஸ்டில் முக்கிய சிறுகதைகளை பதிவு செய்து வருகிறார். அவர் பதிவு செய்துள்ள சிறுகதைகள்

 

1.பித்துக்குளி - ஜெயகாந்தன்     2. தோத்தோ - ஜெயகாந்தன்   3. ரோசம் - அசோகமித்திரன்   4. மனித யந்திரம் – புதுமைப்பித்தன் 5. விடிவதற்குள் - அசோகமித்திரன்  6. யானை டாக்டர் - ஜெயமோகன்      7. பிரசாதம் - சுந்தர ராமசாமி 8. அக்ரஹாரத்துப் பூனை - ஜெயகாந்தன்   9. அன்னியர்கள் - ஆர் சூடாமணி     10. ஏழுமலை ஜமா - பவா செல்லதுரை  11. சோற்றுக்கணக்கு - ஜெயமோகன்   12. புதிர் - அசோகமித்திரன் 13. அவஸ்தைகள் - இந்திரா பார்த்தசாரதி 14. லட்சாதிபதிகள் - ஜெயகாந்தன்   15. இருளில் ஒரு துணை - ஜெயகாந்தன்    16. சிலிர்ப்பு - தி ஜானகிராமன் 17.அன்பளிப்பு - கு அழகிரிசாமி     18. பிரும்மம் - பிரபஞ்சன்       19. ஒரு நாள் கழிந்தது – புதுமைப்பித்தன் 20. கட்டாயம் வேண்டும் - மு வரதராசனார்     21. நாற்காலி - கி ராஜநாராயணன்    22. மருமகள் வாக்கு - கிருஷ்ணன் நம்பி  23.மிலேச்சன் - அம்பை     24. ராஜா வந்திருக்கிறார் - கு அழகிரிசாமி        25. கதவு - கி ராஜநாராயணன் 26. புலிக்கலைஞன் - அசோகமித்திரன்      27. பச்சைக்கனவு - லா ச ராமாமிர்தம்    28. நட்சத்திரக்குழந்தைகள் - பி எஸ் ராமையா  29.கறுப்பு ரயில் - கோணங்கி       30. விகாசம் - சுந்தரராமசாமி     31. புலிக்கட்டம் - எஸ் ராமகிருஷ்ணன் 32. காவல் - ந பிச்சமூர்த்தி    33. விடியுமா ? - கு ப ராஜகோபாலன்       34. மஹாராஜாவின் ரயில் வண்டி - அ முத்துலிங்கம் 35. காடன் கண்டது - பிரமிள்    36. பலாப்பழம் - வண்ணநிலவன்  37. வேனல்தெரு - எஸ் ராமகிருஷ்ணன் 38.இருவர் கண்ட ஒரே கனவு - கு அழகிரிசாமி     39. அப்பாவின் சிநேகிதர் - அசோகமித்திரன்  40. ஒட்டகம் - அ முத்துலிங்கம்   41.காஞ்சனை - புதுமைப்பித்தன்    42. ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் - ஆதவன்     43. வேட்டை - பவா செல்லதுரை 44. பிராந்து - நாஞ்சில் நாடன்      45. யானையின் சாவு - சார்வாகன்     46. பாடலிபுத்திரம் – ஜெயமோகன் 47. காலத்தின் விளிம்பில் - பாவண்ணன்   48. நகரம் - சுஜாதா  49. மிஷின் யுகம் - புதுமைப்பித்தன் 50. பேனாக்கள் - பூமணி 51. ஒரு லட்சம் புத்தகங்கள் - சுஜாதா   52. ஒரு இந்நாட்டு மன்னர் - நாஞ்சில் நாடன் 53. அவ்வா - சாருநிவேதிதா     54. ரெயில்வே ஸ்தானம் - பாரதியார்   55. தாயார் திருப்தி - கு ப ராஜகோபாலன்  56. மரப்பாச்சி - உமா மகேஸ்வரி     57.பூனைகள் இல்லாத வீடு - சந்திரா      58.ஒரு பழைய கிழவரும் புதிய உலகமும் – ஆதவன் 59.இரத்தம் - மு தளையசிங்கம்     60. ரத்னாபாயின் ஆங்கிலம் - சுந்தர ராமசாமி    61.பிரயாணம் – அசோகமித்திரன்  62. பஞ்சத்து ஆண்டி - தி ஜானகிராமன்   63. சோகவனம் - சோ தர்மன்         64. கடிதம் - திலீப்குமார் 65.தனுமை - வண்ணதாசன்     66. கடிதம் - திலீப்குமார்        67.. கடிகாரம் – நீலபத்மநாபன் 68.அணி - எஸ் பொன்னுதுரை  69. இருளப்பசாமியும் 21 கிடாய்களும் - வேல ராமமூர்த்தி    70.தக்கையின் மீது நான்கு கண்கள் - சா கந்தசாமி 71. மரி என்னும் ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்      72. செல்லம்மாள் - புதுமைப்பித்தன்     73. நூறுகள் - கரிச்சான் குஞ்சு 74.வலி - விமலாதித்த மாமல்லன்         75. வந்தான் வருவான் வாரா நின்றான் - நாஞ்சில் நாடன்   76. காடன் மலை - மா அரங்கநாதன் 77. கருப்புசாமியின் அய்யா - ச தமிழ்செல்வன்    78. பாச்சி - ஆ மாதவன்     79. பாதுகை – பிரபஞ்சன் 80.தண்ணீர் - கந்தர்வன்       81. அபூர்வ ராகம் - லா ச ராமாமிர்தம் 82. சுவர்ப்பேய் - யுவன் சந்திரசேகர் 83. தம்பி - கௌதம சித்தார்த்தன்   84.வீடியோ மாரியம்மன் - இமையம்    85.சூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன் 86.வணங்கான் - ஜெயமோகன்     87. பேரிழப்பு - வல்லிக்கண்ணன்    88. அக்னி - அனுராதா ரமணன் 89. பூசணிக்காய் அம்பி - புதுமைப்பித்தன்    90.புவியீர்ப்பு கட்டணம் - அ முத்துலிங்கம்    91. காந்தி – அசோகமித்திரன் 92. உத்யோக ரேகை - சார்வாகன்    93. கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன்  94.சாஸ்தா ப்ரீதி - அ மாதவய்யா 95. அக்பர் சாஸ்திரி - தி ஜானகிராமன்     96. ஸ்டாம்பு ஆல்பம் - சுந்தர ராமசாமி   97.கன்னிமை - கி ராஜநாராயணன் 98.ஒரு ராத்தல் இறைச்சி - நகுலன்    99.அம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை   100. தரிசனம் - கு அழகிரிசாமி  101. மீன் சாமியார் - எம் எஸ் கல்யாணசுந்தரம்    102. ரி - அ முத்துலிங்கம்      103. புயல் – கோபிகிருஷ்ணன் 104.இரணிய வதம் - சா கந்தசாமி      105. ஜீவரசம் - கல்கி     106. சரஸாவின் பொம்மை - சி சு செல்லப்பா 107. வெயிலோடு போய் - ச தமிழ்செல்வன்     108. மாயமான் - ந பிச்சமூர்த்தி     109. குடும்பத்தேர் – மௌனி 110.ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் - சுப்ரபாரதி மணியன்    111. ஒரு கப் காப்பி - இந்திரா பார்த்தசாரதி   112. சிவப்பா உயரமா மீசை வச்சுக்காமல் – ஆதவன் 113. மைதானத்துமரங்கள் - கந்தர்வன்   114. மாஞ்சு - சுஜாதா    115. அக்கினிப்பிரவேசம் - ஜெயகாந்தன்  116.காலமும் ஐந்து குழந்தைகளும் - அசோகமித்திரன்    117. அக்ரஹாரத்தில் பூனை - திலீப் குமார்    118. நிலை நிறுத்தல் - கி ராஜநாராயணன் 119.பணம் பிழைத்தது - பி எஸ் ராமையா    120. கோளறு பதிகம் - ரஞ்சகுமார்    121. நுகம் - எக்பர்ட் சச்சிதானந்தம் 122.கனவுக்கதை - சார்வாகன்   123. பள்ளம் - சுந்தர ராமசாமி  

 

தி தமிழ் ஸ்டோரி என்ற தமிழ் சிறுகதைகள் அடங்கிய ஆங்கில நூலை திலீப் குமார் தொகுத்துள்ளார். அதில் உள்ள தமிழ் சிறுகதைகள் 88.

 

1. சங்கல்பமும் சம்பவமும் - அம்மணி அம்மாள்   2. குளத்தங்கரை அரசமரம் - வ வே சு அய்யர்   3. ரெயில்வே ஸ்தானம் – பாரதியார் 4. கண்ணன் பெருந்தூது - அ மாதவையா     5. சுப்பையர் - செல்வகேசவராயர்     6. மூன்றில் எது - விசாலாட்சி அம்மாள்  7. மகாமசானம் - புதுமைப்பித்தன்    8. மாறுதல் - மௌனி      9. ஆற்றாமை - கு ப ராஜகோபாலன் 10. பதினெட்டாம்பெருக்கு - ந பிச்சமூர்த்தி     11.கூடுசாலை - சி சு செல்லப்பா   12. கண்ணன் என் தோழன் - க நா சுப்ரமண்யம்13. ஒரு நாள் பொழுது - குமுதினி    14. பால்கணக்கு - எஸ் வி வி   15.பலாச்சுளை - ரஸிகன் 16. போலீஸ் விருந்து - கல்கி     17. முதல் செக் வருகிறது - தேவன்     18. மண் - லா ச ராமாமிர்தம் 19.கோதாவரி குண்டு - தி ஜானகிராமன்     20. நாற்காலி - கி ராஜநாராயணன்   21.இரண்டு கணக்குகள் - கு அழகிரிசாமி 22. மயில் - சுந்தர ராமசாமி   23. புலிக்கலைஞன் - அசோகமித்திரன்      24.இருளிலே - ஜி நாகராஜன்  25. திருட்டு - ஆ மாதவன்    26. சின்னூரில் கொடியேற்றம் - சார்வாகன்    27. பதி பசி பாசம் - இந்திரா பார்த்தசாரதி 28. காணாமல் போன அந்தோணி - கிருஷ்ணன் நம்பி       29.சண்டையும் சமாதானமும் - நீல பத்மநாபன்   30.பிணக்கு – ஜெயகாந்தன் 31. தனபால செட்டியார் கம்பனி - அண்ணாதுரை     32.எல்லைக்கு அப்பால் - டி கே சீனிவாசன்    33. மீன்காரி - ராஜம் கிருஷ்ணன் 34. வெளியே நல்ல மழை - ஆர் சூடாமணி      35. பயணம் - வாஸந்தி      36. பொழுது - சிவசங்கரி  37. நிஜத்தைத்தேடி - சுஜாதா     38. மஞ்சள் மீன் - அம்பை  39. நெய் சொம்பு - ந முத்துசாமி 40.எதிர்முனை - சா கந்தசாமி     41. அவளிடம் சொல்லப் போகிறான் - ராமகிருஷ்ணன்    42. தூரதேசம் - விட்டல் ராவ் 43. காலடி ஓசை - ஆதவன்    44. ஆத்திரம் - பூமணி   45. பலாப்பழம் - வண்ணநிலவன் 46. நிலை - வண்ணதாசன்       47. ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள் - பிரபஞ்சன்   48.சாவி - ராஜேந்திர சோழன்  49. மிதப்புகள் முறியும் - பாலகுமாரன்   50. சாமி அலுத்துப் போச்சு - சுப்ரமண்ய ராஜு  51. பகல் உறவுகள் – ஜெயந்தன் 52. எலி -மா அரங்கநாதன்        53. சிலிர்ப்புகள் - சி ஆர் ரவீந்திரன்      54.தினம் ஒரு பாண்டியன் எக்ஸ்ப்ரஸ் - கந்தர்வன் 55. வாக்கு பொறுக்கிகள் - நாஞ்சில் நாடன்   56. மனம் எனும் தோணி பற்றி - திலீப்குமார்     57.அவரவர் வழி - சுரேஷ்குமார் இந்திரஜித் 58. சிறுமி கொண்டுவந்த மலர் - விமலாதித்த மாமல்லன்   59. காலத்தின் ஆவர்த்தனம் - தோபில் முகம்மது மீரான்  60. நாற்காலியும் நான்கு தலைமுறைகளும் -திலகவதி  61.ஏழு எழுவது தரம் -எக்பர்ட் சச்சிதானந்தம்    62. சரோஜாதேவியின் கதை - செண்பகம் ராமசாமி      63.இன்னும் மீதமிருக்கிற பொழுதுகளில் - சுப்ரபாரதி மணியன் 64.பழி - பாவண்ணன்      65. தழும்பு - சோ தர்மன்         66. அனல் மின் மனங்கள் -தமயந்தி  67. ஒரு ரயிலின் நீண்ட பயணம் - சிவகாமி   68. குரல்கள் - ச தமிழ்செல்வன்     69.கிட்டுணன் - ம காமுத்துரை 70. கூந்தல் - ஜெயமோகன்    71.இருட்டு - கோணங்கி      72. எழுத்துக்காரன் - இமையம் 73.வீழ்ந்த மரத்தில் வாழ்ந்த பறவைகள் - சு வேணுகோபால்    74. காக்கை - பெருமாள் முருகன்   75.தீர்ப்பு – பாமா 76.மலையேற்றம் - உமா மகேஸ்வரி      77. கறி - வேல ராமமூர்த்தி      78. வெம்மை - ஜீ முருகன் 79.பறவை - கோகுல கண்ணன்    80. பிழை திருத்துபவனின் மனைவி - எஸ் ராமகிருஷ்ணன்   81. பிச்சை - அழகிய பெரியவன் 82. தவமணி - கண்மணி குணசேகரன்    83. கவர்னர் பெத்தா - மீரான் மைதீன்     84. சித்தர்கள் - விழி பா இதயவேந்தன் 85. நாட்கள் - சுதாகர் கதக்      86. ஈஸ்டர் கோழி - குமாரசெல்வா    87.நாரை சொன்ன கதை - காஞ்சனா தாமோதரன் 88.கிணற்றில் குதித்தவர்கள் - என் ஸ்ரீராம்

 

எ ப்லேஸ் டு லிவ் என்ற ஆங்கில தொகுப்பில் திலீப்குமார் தொகுத்துள்ள தமிழ் சிறுகதைகள்

 

1.நாற்காலி - கி ராஜநாராயணன்         2. எலி - அசோகமித்திரன்     3.மருமகள் வாக்கு - கிருஷ்ணன் நம்பி  4.கோயில் காளையும் உழவு மாடும் - சுந்தர ராமசாமி     5. பிளாஸ்டிக் டப்பாவில் பராசக்தி முதலியார் - அம்பை  6.சுயரூபம் - கு அழகிரிசாமி  7. கனவுக்கதை - சார்வாகன்    8. நகரம் - சுஜாதா      9. சிவமயம் - ஜெயமோகன் 10.இலை - விமலாதித்த மாமல்லன்11.மனசு –பிரபஞ்சன் 12. துணை - தி ஜானகிராமன்  13. கருப்பு ரயில் -கோணங்கி      14. ஹிரண்ய வதம் - சா கந்தசாமி    15. ஒரு கப் காப்பி - இந்திரா பார்த்தசாரதி 16. காணி நிலம் வேண்டும் - கோபிகிருஷ்ணன்     17. டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர் - ஜி நாகராஜன் 18.மதுரையும் மல்லிகைப்பூவும் - மா செண்பகம்    19. பகல் உறவுகள் - ஜெயந்தன்     20. ஒரு இந்நாட்டு மன்னர் - நாஞ்சில் நாடன் 21.டாக்டரம்மா அறை - ஆர் சூடாமணி      22. நிலை - வண்ணதாசன்     23. மிருகம் – வண்ணநிலவன் 24. வேஷம் - பாவண்ணன்     25. நேரம் - பூமணி       26. கோணல் வடிவங்கள் - ராஜேந்திர சோழன் 27.பிற்பகல் - ந முத்துசாமி     28. நாயனம் - ஆ மாதவன்    29. தீர்வு - திலீப்குமார்

 

கல்கியின் கடைசி பக்கம் பகுதியில் மாலன் குறிப்பிட்ட சிறந்த சிறுகதைகள்

 

1. பாற்கடல் - லா ச ராமாமிர்தம்     2. பாயசம் - தி ஜானகிராமன்     3. கதவு - கி ராஜநாராயணன் 4.நான்காம் ஆசிரமம் - ஆர் சூடாமணி  5. அக்கினிப்பிரவேசம் - ஜெயகாந்தன்      6. விகாசம் - சுந்தர ராமசாமி 7. பொழுது - சிவசங்கரி     8. அம்மோனியம் பாஸ்பேட் - சுஜாதா        9. புலிக்கலைஞன் - அசோகமித்திரன்  10.அம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை     11. சின்ன சின்ன வட்டங்கள் - பாலகுமாரன்    12. அப்பாவின் வேஷ்டி - பிரபஞ்சன்

 

 

 

புதிய பார்வை சிறுகதைகள் தொகுப்பு

 இதில் தொகுக்கப்பட்டுள்ள சிறுகதைகள்

 1.புவனாவும் வியாழக்கிரகமும் - ஆர் சூடாமணி     2. தங்கராசு - தோப்பில் முகம்மது மீரான்  3.மண்ணின் மகன் - நீல பத்மநாபன் 4.கனவுத் துறைமுகம் - எஸ் சங்கரநாராயணன்     5. அடையாளம் - விட்டல் ராவ்     6.கல்லினுள் நீர் - புஷ்பா தங்கதுரை 7. அனுமதி - சுஜாதா 8. பனை - மா அரங்கநாதன்   9. நாய்வால் - வாலி  10.ஒவ்வொரு கல்லாய் - கந்தர்வன்      11. மூன்றாவது பெண் - செ யோகநாதன்    12. அடி – வண்ணதாசன் 13.திருடன் - வண்ணநிலவன்     14. இன்னொருத்தி - சி ஆர் ரவீந்திரன்    15. அம்மாவின் புடவை - ஆ மாதவன் 16.முதுகில் பாயாத அம்புகள் -சு சமுத்திரம்       17. சிறுவீடு - நாஞ்சில் நாடன்     18. நிறம் - இரா முருகன்  19.வானவில் பார்த்தல் - அறிவுமதி      20. வேரில்லாத மேகங்கள் - சவீதா      21. மறைந்து திரியும் கிழவன் - சுரேஷ்குமார் இந்திரஜித் 22. தர்மோபதேசம் - அனுராதா ரமணன்    23. திரிபு - கி ராஜநாராயணன்      24. ரௌத்திரம் - மேலாண்மை பொன்னுச்சாமி 25.மீனு இல்லாத மெஸ் - கிருஷ்ணகிரி வசந்தன்      26. தருணம் - சுப்ரபாரதி மணியன்    27. நெல்மணம் – சுபா 28.ரெட்டியார் சத்திரம் - தனுஷ்கோடி ராமசாமி    29.வார்த்தை – பொன்னீலன்

லதா அருணாச்சலம் முகநூலில் விமர்சித்த முக்கிய சிறுகதைகள்

 1. செல்லம்மாள் - புதுமைப்பித்தன்   2. கன்னிமை - கி ராஜநாராயணன்     3. முதலில் இரவு வரும் – ஆதவன் 4. நான்காம் ஆசிரமம் - ஆர் சூடாமணி     5. கருணையினால் தான் - பிரபஞ்சன்     6. வெயிலோடு போய் - ச தமிழ் செல்வன்

7. செல்லக்கிளியின் தம்பி - நந்தன் ஸ்ரீதரன்    8. இன்னொருவன் - தூயவன்      9. திருக்கார்த்தியல் - ராம் தங்கம் 10.வெளிச்ச நர்த்தனம் - க சீ சிவக்குமார்    11.அன்புள்ள ... லா ச ராமாமிர்தம்    12. காட்டில் ஒரு மான் - அம்பை  13. பொழுது போகாமல் ஒரு சதுரங்கம் - வண்ணதாசன்    14.தாலியில் பூச்சூடியவர்கள் - பா செயப்பிரகாசம்   15. கடைசிக்கட்டி மாம்பழம்-தஞ்சை ப்ரகாஷ்

 

 

உயிர்மை டிவி யூடியூபில் கதைபேசலாம் என்ற தலைப்பில் சீதாபாரதி சிறந்த சிறுகதைகளை சொல்லி வந்தார். அந்த சிறுகதைகள்

 

1. குதிரை - சுஜாதா     2. ராஜா வந்திருக்கிறார் - கு அழகிரிசாமி    3. ஒரு பழைய கிழவர் ஒரு புதிய உலகம் – ஆதவன் 4.ஒரு சிறு இசை - வண்ணதாசன்     5. சுமைதாங்கி - ஜெயகாந்தன்         6. காய்ச்சமரம்  - கி ராஜநாராயணன் 7.புலிக்கலைஞன் - அசோகமித்திரன் 8. ரத்னாபாயின் ஆங்கிலம் - சுந்தர ராமசாமி     9. அம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை 10. ஓடிய கால்கள் - ஜி நாகராஜன்     11. எஸ்தர் - வண்ணநிலவன்    12. மரி என்னும் ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்  13. ஊமைசெந்நாய் - ஜெயமோகன்        14. வெயிலோடு போய் - ச தமிழ்ச்செல்வன்     15. பிளாக் நம்பர் 27. திர்லோக்புரி - சாருநிவேதிதா  16. செல்லம்மாள் - புதுமைப்பித்தன்     17. தக்கையின் மீது நான்கு கண்கள் - சா கந்தசாமி   18. கொல்லனின் ஆறு பெண்மக்கள் – கோணங்கி 19. மருமகள் வாக்கு - கிருஷ்ணன் நம்பி    20. மரப்பாச்சி - உமா மகேஸ்வரி      21. அனந்த சயனம் காலணி - தோப்பில் முகம்மது மீரான் 22.பச்சைக்கனவு - லா ச ராமாமிர்தம்    23. இடலக்குடி ராசா - நாஞ்சில் நாடன்     24. நூருன்னிசா - கு ப ராஜகோபாலன்

 

 

பேசும் புத்தகம் என்ற தலைப்பில் புக்டே இணைய தளத்தில் வந்த முக்கிய சிறுகதைகள்

 

1.வெயிலோடு போய்  - ச தமிழ்செல்வன்       2. அப்பாவின் வேஷ்டி - பிரபஞ்சன்      3. யுகதர்மம் – வண்ணநிலவன் 4.நூருன்னிசா - கு ப ராஜகோபாலன்    5. மாறுதல் - மௌனி     6. மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்  7. நகரம் - சுஜாதா      8. பால்வண்ணம் பிள்ளை - புதுமைப்பித்தன்     9. காஞ்சனை - புதுமைப்பித்தன்  10. ஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன்     11.பொன்னகரம் - புதுமைப்பித்தன்   12. பரதேசி வந்தான் - தி ஜானகிராமன் 13.சிலிர்ப்பு - தி ஜானகிராமன்     14. பறிமுதல் - ஆ மாதவன்      15. கதவு - கி ராஜநாராயணன் 16. புற்றிலுறையும் பாம்புகள் - இராஜேந்திர சோழன்    17. கனகாம்பரம் - கு ப ராஜகோபாலன்   18.சித்தாள் சாதி - மேலாண்மை பொன்னுசாமி 19. புலிக்கலைஞன் - அசோகமித்திரன்     20. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் -சுப்ரபாரதி மணியன்   21. செவ்வாழை – அண்ணாதுரை 22.பிரயாணம் - அசோகமித்திரன்      23. காட்டில் ஒரு மான் - அம்பை     24. சீதை மார்க் சீயக்காய்தூள் - சுந்தர ராமசாமி 25. முள் கிரீடம் - தி ஜானகிராமன்     26. மானாவாரிப்பூ - மேலாண்மை பொன்னுச்சாமி   27. ஓடிய்ய கால்கள் - ஜி நாகராஜன் 28. ஒரு மனுஷி - பிரபஞ்சன்  29. மிருகம் - வண்ணநிலவன்       30. கரையும் உருவங்கள் -வண்ணநிலவன்   31.ஒரு திருணையின் பூர்வீகம் - மு சுயம்புலிங்கம்    32. காலமும் ஐந்து குழந்தைகளும் - அசோகமித்திரன்    33. வனம்மாள் - அழகிய பெரியவன் 34.பிராயச்சித்தம் - சார்வாகன்   35.துளி விஷம் - ஆனந்த் ராகவ்

 

 

பாட்காஸ்ட்.ஆப்பிள்.காம் என்ற வலைதளத்தில் ஜெய்சக்திவேல் வலையேற்றி இருக்கும் சிறுகதைகள்

 

1. பஞ்சத்து ஆண்டி - தி ஜானகிராமன்     2. மதினிமார்கள் கதை - கோணங்கி     3. விஜயதசமி - ந பிச்சமூர்தி 4. அழியாச்சுடர் - மௌனி      5. ஒரு ஜோடிக்காளை - தி ஜ ரங்கநாதன்   6. கோட்டை வீடு - வ ரா 7.சாவித்திரி - க ந சுப்ரமணியம்      8. காலச்சக்கரம் - வை மு கோதை நாயகி அம்மாள்    9. சிலிர்ப்பு - தி ஜானகிராமன் 10.நொண்டிக்குழந்தை - சி சு செல்லப்பா 11. அநுபவ நாடகம் - கல்கி   12. தொடரும் நிழல் -- எம் வி வெங்கட் ராம் 13.உத்தராயணம் - லா ச ராமாமிர்தம்     14. காற்று - கு அழகிரிசாமி        15. தெளிவு - வல்லிக்கண்ணன் 16.கண்ணம்மா - விந்தன்     17.தொலைவு  - பூமணி     18. மிஸ் பாக்கியம் - ஜி நாகராஜன் 19.புயல் - கோபிகிருஷ்ணன்    20.நாற்காலி - கி ராஜநாராயணன்      21. காஞ்சனை – புதுமைப்பித்தன் 22. பள்ளம் - சுந்தர ராமசாமி   23. அம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை     24. எஸ்தர் – வண்ணநிலவன் 25.பேய்க்கவிதை - தஞ்சை ப்ரகாஷ்    26. தக்கையின் மீது நான்கு கண்கள் - சா கந்தசாமி  27.புவனாவும் வியாழக்கிரகமும் - ஆர் சூடாமணி 28.கிழிசல் - நாஞ்சில் நாடன்    29. கனவுக்கதை - சார்வாகன்    30. சமவெளி- வண்ணதாசன் 31.சோற்றுக்கணக்கு - ஜெயமோகன்      32. செம்படவச்சிறுமி - சங்கு சுப்ரமணியம்     33.ஒரு கிராமத்து ராத்திரிகள் - பா செயப்பிரகாசம் 34.நட்சத்திரக்குழந்தைகள் - பி எஸ் ராமையா    35. நாயனம் - ஆ மாதவன்      36. விடியுமா - கு ப ராஜகோபாலன் 37.மனச்சாய்வு - ஜெயந்தன்      38. சசாங்கனின் ஆவி - சிதம்பர சுப்ரமணியம்      39. கோணல் வடிவங்கள் - ராஜேந்திர சோழன் 40.பிரதிவாதி பயங்கரம் - நாரண துரைக்கண்ணன்    41. சாசனம் - கந்தர்வன்   42. கடல் -தோப்பில் முகம்மது மீரான் 43.சட்டை - கிருஷ்ணன் நம்பி      44. கோடரி - பிரமிள்     45. தேவகி - குகப்ரியை  46. கடிதம் - திலீப் குமார்      47. மரி என்னும் ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்    48.அச்சுவெல்லம் – ஐராவதம்  49.அவள் அறியாள் - என் ஆர் தாசன்     50. அமிர்தம் - கா ஸ்ரீ ஸ்ரீ     51. செல்லம்மாள் – புதுமைப்பித்தன் 52.பட்டுவின் கல்யாணம் - காசி வேங்கடரமணி     53. நாதஸ்வரம் - த நா குமாரசாமி   54.எருது கட்டு - வேல ராமமூர்த்தி    55.குழந்தையின் கேள்வி - கி சந்திர சேகரன்     56.பலாச்சுளை – ரஸிகன்

 

கதைசொல்லி மகா என்ற பெயரில் மகாராஜன் யூ டியூபில் பல சிறந்த சிறுகதைகளை சொல்லிவருகிறார்.அவர் இதுவரை சொல்லி  இருக்கும் கதைகள்

 1.மூங்கில் - ஜெயகாந்தன்      2.ஒரு பகல்நேர பாசஞ்சர் வண்டியில் - ஜெயகாந்தன்   3. அறம் – ஜெயமோகன் 4. கதவு - கி ராஜநாராயணன்   5. விகாசம் - சுந்தர ராமசாமி     6. காய்ச்சமரம் - கி ராஜநாராயணன்  7.அக்ரஹாரத்துப்பூனை - ஜெயகாந்தன்   8. ராஜா வந்திருக்கிறார் - கு அழகிரிசாமி    9. நகரம் – சுஜாதா 10. மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்   11. தலைசாய்க்க - பிரபஞ்சன்     12. பால்வண்ணம் பிள்ளை – புதுமைப்பித்தன் 13.நாற்காலி - கி ராஜநாராயணன்    14. கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் - புதுமைப்பித்தன்   15. காக்கைச்சிறகு – பிரபஞ்சன்

16.அப்பாவு கணக்கில் 35 ரூபாய் - பிரபஞ்சன்   17. தர்க்கத்திற்கு அப்பால் - ஜெயகாந்தன்   18. வனம்மாள் -அழகிய பெரியவன் 19.சாசனம் - கந்தர்வன்    20. நட்சத்திரக்குழந்தைகள் - பி எஸ் ராமையா    21. நாயனம் - ஆ மாதவன்  22. இருவர் கண்ட ஒரே கனவு - கு அழகிரிசாமி     23. விடியுமா - கு ப ராஜகோபாலன்    24. நீர் விளையாட்டு - பெருமாள் முருகன் 25.அம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை   26.  பாயசம் - தி ஜானகிராமன்      27. யுகசந்தி - ஜெயகாந்தன்  28. காஞ்சனை - புதுமைப்பித்தன்    29. எழுத மறந்த கதை - கி ராஜநாராயணன்  30. சுமைதாங்கி –ஜெயகாந்தன் 31. காதுள்ள கடவுள் - எஸ் ராமகிருஷ்ணன்     32. மகாமசானம் - புதுமைப்பித்தன்    33. மொசு மொசுவென்று சடைவைத்த வெள்ளை முடி ஆடுகள் - அ முத்துலிங்கம் 34.தெரு விளக்கு - புதுமைப்பித்தன்    35. நிலம் என்னும் நல்லாள் - அ முத்துலிங்கம்   36. உயிர் – கந்தர்வன் 37.இச்சி மரம் - மேலாண்மை பொன்னுச்சாமி     38. நிலை நிறுத்தல் - கி ராஜநாராயணன்    39. பொன்னகரம் – புதுமைப்பித்தன் 40. முள் கிரீடம் - தி ஜானகிராமன்  41.பச்சைக்குதிரை - ஜி நாகராஜன்  42. வேப்பமரம் - ந பிச்சமூர்த்தி  43. கருப்பசாமியின் அய்யா - ச தமிழ்ச்செல்வன்     44. இந்நாட்டு மன்னர்கள் - நாஞ்சில் நாடன்     45. ரத்னாபாயின் ஆங்கிலம் - சுந்தர ராமசாமி 46.தில்லை வெளி - நகுலன்     47. ஆகஸ்ட் 15 - பிரபஞ்சன் 48. அவளது வீடு - எஸ் ராமகிருஷ்ணன்   49.வலி - பவா செல்லதுரை     50. ஒரு பிடி சோறு - ஜெயகாந்தன்     51. கிழிசல் - நாஞ்சில் நாடன் 52. பால் நரம்பு - கண்மணி குணசேகரன்    53. கனகாம்பரம் - கு ப ராஜகோபாலன்     54. காட்டில் ஒரு மான் – அம்பை 55. சோற்றுக்கணக்கு - ஜெயமோகன்   56. ஓர் இவள் - கி ராஜநாராயணன்      57. பூமத்தியரேகை - அ முத்துலிங்கம் 58. கருப்பு ரயில் - கோணங்கி    59. இருளப்ப சாமியும் 21 கிடாய்களும் - வேல ராமமூர்த்தி    60. ஆயிஷா - இரா நடராஜன் 61. இரத்த சுவை - கரிச்சான் குஞ்சு    62. புயல் - கோபிகிருஷ்ணன்      63. தொலைவு - பூமணி 64. ராட்சஸம் - அப்துல் ரகுமான்    65. தகுந்த தண்டனையா - லக்ஷ்மி     66. ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள் - பிரபஞ்சன்67. நிலை - வண்ணதாசன்     68. பால்மணம் - கோமகள்   69. மைதானத்து மரங்கள் - கந்தர்வன் 70. அண்ணாச்சி - பாமா      71. வெளுப்பு - அழகிய பெரியவன்       72. காக்கை குருவி உங்கள் சாதி - ஆதவன் தீட்சண்யா 73. செவ்வாழை - அண்ணாதுரை     74. சித்தாள் சாதி - மேலாண்மை பொன்னுச்சாமி   75. பாட்டியின் தீபாவளி – புதுமைப்பித்தன் 76. ஒட்டகச்சவாரி -- அம்பை       77. தங்க ஒரு - கிருஷ்ணன் நம்பி      78. பூவும் சந்தனமும் - ஜி நாகராஜன்

 

 

எழுத்தாளர் நாறும்பூ நாதன் முகநூலில் பேசிய சிறுகதைகள்

 

1.அப்பாவின் வேஷ்டி - பிரபஞ்சன்       2. மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்    3. இருளப்பசாமியும் 21 கிடாய்களும் - வேல ராமமூர்த்தி 4.பால்வண்ணம் பிள்ளை - புதுமைப்பித்தன்    5. அக்கினிப்பிரவேசம் - ஜெயகாந்தன்    6. காலனும் கிழவியும் – புதுமைப்பித்தன் 7. டேனியல் பெரியநாயகத்தின் புல்லாங்குழல் - உதயசங்கர்  8. அரசனின் மரணம் - பாஸ்கர் சக்தி     9. கிணற்று தண்ணீரும் ஆற்றுமீனும் – வண்ணதாசன் 10.தாத்தாவின் டைரி குறிப்புகள் - சுப்பாராவ்   11.ரெட்டை மஸ்தானருகில் - கீரனூர் ஜாகிர் ராஜா   12. தன்ராம் சிங் - நாஞ்சில் நாடன் 13.ஒவ்வொரு கல்லாய் - கந்தர்வன்     14. கலவரம் - தமயந்தி       15. பிரயாணம் – வண்ணனிலவன் 16. அன்பளிப்பு - கு அழகிரிசாமி       17. விடியுமா - கு ப ராஜகோபாலன்      18. குளத்தங்கரை அரசமரம் - வ வே சு ஐயர் 19. கதவு - கி ராஜநாராயணன்    20. பைத்தியக்காரப்பிள்ளை - எம் வி வெங்கட் ராம்   21. மருமகள் வாக்கு - கிருஷ்ணன் நம்பி 22.குப்பமாவின் பெண்கள் - ஆர் சூடாமணி     23. மதினிமார்கள் கதை - கோணங்கி    24. கருப்பு ரயில் - கோணங்கி  25. கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் - புதுமைப்பித்தன்    26. பாயசம் - தி ஜானகிராமன்    27. கொத்தைப்பருத்தி - கி ராஜநாராயணன் 28. மகாமசானம் - புதுமைப்பித்தன்      29. நிலை - வண்ணதாசன்  30.அப்பாவின் கடிதம் - நாறும்பூ நாதன் 31. அம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை   32. மின்னல் - கி ராஜநாராயணன்  

 

கதையியல் என்ற நூலில் க பூரணச்சந்திரன் குறிப்பிடும் சிறுகதைகள்

 

1.மறுபடியும் - அசோகமித்திரன்     2. ரிக்க்ஷா  - அசோகமித்திரன்    3. பிரயாணம் - அசோகமித்திரன் 4. காலமும் ஐந்து குழந்தைகளும் - அசோகமித்திரன்  5. குருபீடம் - ஜெயகாந்தன்     6. நான் இருக்கிறேன் – ஜெயகாந்தன் 7.அக்கினிப்பிரவேசம் - ஜெயகாந்தன்    8. இருளைத்தேடி - ஜெயகாந்தன்      9. இருளும் ஒளியும் – ஜெயகாந்தன் 10. யுகசந்தி - ஜெயகாந்தன்      11. ட்ரெடில் - ஜெயகாந்தன்     12. ஜன்னல் - சுஜாதா     13.நகரம் – சுஜாதா 14. ஆற்றாமை - கு ப ராஜகோபாலன்     15. விடியுமா - கு ப ராஜகோபாலன்    16. நியாயம் – புதுமைப்பித்தன்    17. பொன்னகரம் - புதுமைப்பித்தன்    18. சாபவிமோசனம் - புதுமைப்பித்தன்     19.செல்லம்மாள் –புதுமைப்பித்தன் 20. மிஷின் யுகம் - புதுமைப்பித்தன்    21. கபாடபுரம் - புதுமைப்பித்தன்    22.கயிற்றரவு – புதுமைப்பித்தன் 23. காஞ்சனை - புதுமைப்பித்தன்      24. மதினிமார்களின் கதை - கோணங்கி    25. விளக்கு பூசை - கண்மணி குணசேகரன் 26. சீதை மார்க் சீயக்காய்தூள் - சுந்தர ராமசாமி    27. ரத்னாபாயின் ஆங்கிலம் - சுந்தர ராமசாமி   28. கோலம் - சுந்தர ராமசாமி  29. பல்லக்கு தூக்கிகள் - சுந்தர ராமசாமி    30.கோவில் காளையும் உழவு மாடும் -சுந்தர ராமசாமி  31. சின்ன சின்ன வட்டங்கள் -பாலகுமாரன்    32. குளத்தங்கரை அரசமரம் - வ வே சு ஐயர்  33. நல்ல சாவு - இமையம் 34. தனுமை - வண்ணதாசன்     35. மனக்கோட்டை - மௌனி     36. இந்நாட்டு மன்னர்கள் - நாஞ்சில் நாடன் 37.பிரபஞ்ச கானம் - மௌனி     38. இடைவெளி - சம்பத்        39. கார்னிவெல் - பி எஸ் ராமையா 40. நட்சத்திரக்குழந்தைகள் - பி எஸ் ராமையா     41. காற்று- கு அழகிரிசாமி      42. ராஜா வந்திருக்கிறார் - கு அழகிரிசாமி 43.பைத்தியக்காரப்பிள்ளை - எம் வி வெங்கட் ராம் 

 

புது எழுத்து தமிழ் சிறுகதைகள் என்ற தொகுப்பை ஜோ டி குரூஸ் தொகுத்து நேஷனல் புக் ட்ரஸ்ட் வெளியிட்டுள்ளது. அதில் உள்ள சிறுகதைகள்

 

1.புற்று - சு வேணுகோபால்   2. வார்த்தைப்பாடு - அசதா        3. கருக்கு - கண்மணி குணசேகரன் 4.நண்டு - செல்வராஜ்     5. கருப்பட்டி - மலர்வதி      6. புலி சகோதரர்கள் -எஸ் செந்தில்குமார் 7.வெட்டும் பெருமாள் - கார்த்திக் புகழேந்தி     8. உசுரு கிடந்தா புள்ள பரிச்சு திண்ணலாம் - குரும்பனை சி பெர்லின்  9. வேட்டை - யூமா வாசுகி 10. யாமினி அம்மா -போகன் சங்கர்   11. சார் வீட்டுக்குப் போகனும் - ஆமருவி தேவநாதன்     12. மனைவியின் அப்பா - க சீ சிவக்குமார்   13.மரப்பாச்சி - உமா மகேஸ்வரி      14. சொல்லி சென்ற கதை - அறிவரசு     15. கருட வித்தை - என் ஸ்ரீராம் 16. பொற்கொடியின் சிறகுகள் - அழகியபெரியவன்     17. நான் அவன் அது - கவிதா சொர்ணவல்லி      18. கள்வன் – சந்திரா   19. இருளில் மறைபவர்கள் - தூரன் குணா    20. கல் செக்கு - தாமிரா     21. இரவு - எம் கோபாலகிருஷ்ணன் 22. அழகர்சாமியின் குதிரை - பாஸ்கர் சக்தி     23. அப்பா மகள் - ப்ரியா தம்பி      24. இப்படிக்கு - தங்கபாண்டி

 

வாசகசாலை உரையாடல் என்ற இலக்கிய நிகழ்ச்சியை முகநூலில் நடத்தி வருகிறது. ஒரு சிறுகதை பற்றி பேசப்படுகிறது.

 

அப்படி பேசப்பட்ட கதைகளில் முக்கிய கதைகளைக் காண்போம்.

 1.சித்தாள் சாதி -  மேலாண்மை பொன்னுச்சாமி     2. ஒரு மனுஷி - பிரபஞ்சன்     3. பேச்சியம்மை - நாஞ்சில் நாடன் 4.பூமாலை - ஆர் சூடாமணி      5. சிவப்பா உயரமா மீசை வச்சுக்காம - ஆதவன்    6. வெளிய – வெண்ணிலா  7. காலமும் ஐந்து குழந்தைகளும் - அசோகமித்திரன்    8. காஞ்சனை - புதுமைப்பித்தன்     9. வெயிலோடு போய் - ச தமிழ்ச்செல்வன் 10. அனந்த சயனம் காலணி - தோப்பில் முகம்மது மீரான்   11. பிழை திருத்துபவ்ரின் மனைவி - எஸ் ராமகிருஷ்ணன்   12. மரப்பாச்சி - உமா மகேஸ்வரி 13. நகரம் - சுஜாதா         14. மைதானத்து மரங்கள் - கந்தர்வன்       15. இருள் - சல்மா  16. தக்கையின் மீது நான்கு கண்கள் - சா கந்தசாமி  17. கனவுக்கதை - சார்வாகன்     18. கோப்பம்மாள் – கோணங்கி   19.நாயனம் - ஆ மாதவன்      20. நூறு நாற்காலிகள் - ஜெயமோகன்      21. அடுத்த வீடு - எம் வி வெங்கட் ராம் 22.திருக்கார்த்தியல் - ராம் தங்கம்      23. தீர்ப்பு - வாஸந்தி       24. சோகவனம் - சோ தர்மன்  25. மூங்கில் குருத்து - திலீப்குமார்     26. காசி - பாதசாரி     27. நீர்மை - ந முத்துசாமி  28. இருவர் கண்ட ஒரே கனவு - கு அழகிரிசாமி     29.நான் அவன் அது - கவிதா சொர்ணவல்லி   30. நுகம் - எக்பர்ட் சச்சிதானந்தம் 31. காலத்தின் விளிம்பில் - பாவண்ணன்     32. புயல் - கோபிகிருஷ்ணன்     33. பால்மணம் –கோமகள் 34. சதுப்பு நிலம் - எம் ஏ நுஃமான்        35. தொலைவு - பூமணி  36. கன்னிமை - கி ராஜநாராயணன் 37. சிதைவு - பவா செல்லதுரை       38. ஓடிய கால்கள் - ஜி நாகராஜன்     39. இருளப்ப சாமியும் 21 கிடாய்களும் - வேல ராமமூர்த்தி 40.வேட்டை - யூமா வாசுகி     41. சிறுமி கொண்டு வந்த மலர் - விமலாதித்த மாமல்லன்    42. அண்ணாச்சி – பாமா 43.அபூர்வராகம் - லா ச ராமாமிர்தம்     44. மீன்கள் - தெளிவத்தை ஜோசப்    45. நூறுகள் - கரிச்சான் குஞ்சு 46. மருமகள் வாக்கு - கிருஷ்ணன் நம்பி     47. செவ்வாழை - அண்ணாதுரை      48. காடன் கண்டது – பிரமிள் 49. அரசனின் வருகை - உமா வரதராஜன்    50. குளத்தங்கரை அரசமரம் - வ வே சு அய்யர்   51. ஆண்மை - எஸ் பொன்னுத்துரை    52. கோடி மெழுகுவர்த்திகள் - சுப்ரபாரதி மணியன்    53. ஹார்மோனியம் - செழியன்     54. சிறை - அனுராதா ரமணன் 55. ஆண்களின் படித்துறை - ஜே பி சாணக்யா    56.புற்றிலுரையும் பாம்புகள் - ராஜேந்திர சோழன்    57. வதம் – திலகவதி  58.நட்சத்திரக்குழந்தைகள் - பி எஸ் ராமையா    59. குட்டியாப்பா - நாகூர் ரூமி   60.செக்குமாடு - வ ஐ ச ஜெயபாலன் 61. ஒரு திருணையின் கதை - மு சுயம்புலிங்கம்  

வாசகசாலை அமைப்பு சென்னையில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையில் கூடி மூன்று சிறுகதைகளைப் பற்றி விமர்சிக்கிறது. 12/2/17 அன்று முதல் கூட்டம் நடந்தது. தமிழ் சிறுகதையின் நூற்றாண்டு கொண்டாட்டம் என்று முகநூலில் அறிவிக்கப்பட்டு  அதிலிருந்து தொடர்ச்சியாக அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும்  இலக்கியக்கூட்டத்தை நடத்தி வருகிறது. பேசப்போகும் மூன்று கதைகளையும் முதலிலேயே அவ்வமைப்பு அறிவிக்கிறது. அப்படி வாசகசாலை அமைப்பால் வாரம் 51 முதல் 100 வரைபேசப்பட்ட முக்கிய கதைகளை இனி காணலாம்

 

1.நான் இருக்கிறேன் - ஜெயகாந்தன்   2. நிழல்கள் - ஆதவன்  3. கோகிலவாணியை யாருக்கும் தெரியாது - எஸ் ராமகிருஷ்ணன் 4.மஹாராஜாவின் ரயில் வண்டி - அ முத்துலிங்கம்     5. செல்லம்மாள் - புதுமைப்பித்தன்     6. தாம்பரம் சந்திப்பு - பாஸ்கர் சக்தி  7.மீட்சி - வாஸந்தி    8. தவுட்டு குருவி - பாமா      9. அண்ணாச்சி - பாமா   10.விட்டு விடுதலையாகி - பாமா    11. காட்டில் ஒரு மான் - அம்பை     12. மிலேச்சன்  - அம்பை  13.ஏழுமலை ஜமா - பவா செல்லதுரை   14. பேச்சியம்மை - நாஞ்சில் நாடன்      15. அடமானம் - சோ தர்மன் 16.டிரெடில்- ஜெயகாந்தன்       17. வக்கிரம் - பாவண்ணன்  18. நகரம் – சுஜாதா 19. அம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை    20. மூங்கில் குருத்து - திலீப்குமார்     21. சித்தாள் சாதி - மேலாண்மை பொன்னுச்சாமி 22.கதவு - கி ராஜநாராயணன்       23. அன்பளிப்பு - கு அழகிரிசாமி        24. அப்பாவின் சைக்கிள் - பாவண்ணன்  25. காற்றின் அனுமதி - வண்ணதாசன்     26. புர்ரா - எஸ் ராமகிருஷ்ணன்  27. ஆஃபர் – இமையம் 28. மீட்பு - போகன் சங்கர்      29. மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்      30. ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் – ஆதவன் 31. கால் - பவா செல்லதுரை    32. புகை நடுவில் - எஸ் ராமகிருஷ்ணன்  33. அடையாளம் - வெண்ணிலா 34.கோமதி - கி ராஜநாராயணன்     35. பாதுகை - பிரபஞ்சன்   36. அன்னை இட்ட தீ – பிரபஞ்சன் 37. காய்ச்சமரம் - கி ராஜநாராயணன்      38. கோயில் கொடை - லட்சுமணப்பெருமாள்   39. சுயரூபம் - கு அழகிரிசாமி 40.வெளிய - அ வெண்ணிலா      41. வெளுப்பு - அழகியபெரியவன்       42. நிஜமும் பொய்யும் - இமையம்   43.செவ்வாழை - அண்ணாதுரை      44. குருபீடம் - ஜெயகாந்தன்  45. கல்யாணி - ந முத்துசாமி  46.நீர்மை - ந முத்துசாமி       47. இழப்பு - ந முத்துசாமி   48. முள்முடி - தி ஜானனிராமன் 49. வாக்குமூலம் - தமயந்தி     50. ஒரு லட்சம் புத்தகங்கள் - சுஜாதா    51. வேஷம் - பாவண்ணன்  52. இருள் - சல்மா     53. பால்மணம் - கோமகள்      54. வதம் - திலகவதி   55. தோஷம் - ஆண்டாள் பிரியதர்ஷிணி     56. வரம் - சோ தர்மன்    57. கருப்பு ரயில் – கோணங்கி 58.அண்ணனின் புகைப்படம் - அ முத்துலிங்கம்    59. பிடி - பவா செல்லதுரை    60. யுகசந்தி – ஜெயகாந்தன் 61. கிழிசல் - நாஞ்சில் நாடன்    62. பொற்கொடியின் சிறகுகள் - அழகிய பெரியவன்   63. உயிர் – கந்தர்வன்  64. மகாமசானம் - புதுமைப்பித்தன்   65. முள் - சாருநிவேதிதா     66. மேபல் -- தஞ்சை ப்ரகாஷ் 67.சிலிர்ப்பு - தி ஜானகிராமன்   68. ஒரு பிடி சோறு - ஜெயகாந்தன்    69. பைத்தியக்காரப் பிள்ளை - எம் வி வெங்கட் ராம் 70.ஆண்மை - புதுமைப்பித்தன்      71. செல்லம்மாள் – புதுமைப்பித்தன் 72. சித்தி - மா அரங்கநாதன் 73. நிலை - வண்ணதாசன்  74. நட்சத்திரக் குழந்தைகள் - பி எஸ் ராமையா  75. மூடி இருந்தது - சி சு செல்லப்பா 76. தேடல் - வாஸந்தி      77. கனகாம்பரம் - கு ப ராஜகோபாலன்   78.  தக்கையின் மீது நான்கு கண்கள் - சா கந்தசாமி 79. தாலியில் பூச்சூடியவர்கள் - பா செயப்பிரகாசம்   80. ஒரு சிறு இசை - வண்ணதாசன்    81. பிம்பம் - லா ச ராமாமிர்தம் 82. பச்சைக்கனவு - லா ச ராமாமிர்தம்     83. அபூர்வ ராகம் - லா ச ராமாமிர்தம்    84. வலி - பவா செல்லதுரை 85. சிதைவு - பவா செல்லதுரை     86. முள்முடி - தி ஜானகிராமன்    87. சாப்பாடு போட்டு நாற்பது ரூபாய் - தி ஜானகிராமன் 88. பாயசம் - தி ஜானகிராமன்

 

 மேலும் சில வாசகசாலை அமைப்பில் பேசப்பட்ட கதைகள்

 

1.பற்றி எரிந்த தென்னைமரம் - தஞ்சை ப்ரகாஷ்       2. நீர்மை - ந முத்துசாமி       3. இணைப்பறவை - ஆர் சூடாமணி 4. நீர் விளையாட்டு - பெருமாள் முருகன்      5. காஞ்சனை - புதுமைப்பித்தன்     6. விடிவதற்கு முன் – அசோகமித்திரன்  7. சுமைதாங்கி - ஜெயகாந்தன்      8. பள்ளம் - சுந்தர ராமசாமி      9. காலத்தின் ஆவர்த்தனம் - தோப்பில் முகம்மது மீரான் 10.நூறு நாற்காலிகள் - ஜெயமோகன்     11. மரப்பாச்சி - உமா மகேஸ்வரி  12. சிதறல்கள் - பாமா 13.பிழை திருத்துபவரின் மனைவி - எஸ் ராமகிருஷ்ணன்   14.அம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை    15. இருளப்பசாமியும் 21 கிடாய்களும் - வேல ராமமூர்த்தி 16.துன்பக்கேணி - புதுமைப்பித்தன்     17. மஹாராஜாவின் ரயில் வண்டி - அ முத்துலிங்கம்   18.அமெரிக்காகாரி - அ முத்துலிங்கம் 19.வனம்மாள் - அழகிய பெரியவன்    20. மதினிமார்கள் கதை - கோணங்கி  21. ஆணைக்கிணறு - உதயசங்கர்

 

சிறந்த தமிழ் சிறுகதைகள் புக்மார்க் ராகவ் யூ டியூபில்

 

1.பேதை - கி ராஜநாராயணன்     2. பாயசம் - தி ஜானகிராமன்     3. பாம்பு - நாஞ்சில் நாடன் 4. தாவரங்களின் உரையாடல் - எஸ் ராமகிருஷ்ணன்     5. ஒரு கப் காப்பி - இந்திரா பார்த்தசாரதி   6. எஸ்தர் – வண்ணநிலவன் 7. ஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன்   8. வெயிலோடு போய் - ச தமிழ்செல்வன்     9. ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள் – பிரபஞ்சன் 10.நீர்மை - ந முத்துசாமி  11. செங்கமலமும் ஒரு சோப்பும் - சுந்தர ராமசாமி    12. கருப்பனார் கிணறு - பெருமாள் முருகன்

 

தமிழ் இலக்கிய வரலாறு என்னும் நூலில் எஸ் ஸ்ரீகுமார் சிறந்த சிறுகதைகளாக குறிப்பிடும் சிறுகதைகள்

 

1.விடியுமா - கு ப ராஜகோபாலன்      2. சிறிது வெளிச்சம் - கு ப ராஜகோபாலன்    3. ஆற்றாமை - கு ப ராஜகோபாலன் 4. நட்சத்திரக்குழந்தைகள் - பி எஸ் ராமையா      5. துன்பக்கேணி - புதுமைப்பித்தன்     6. சாபவிமோசனம் – புதுமைப்பித்தன்  7. கயிற்றரவு - புதுமைப்பித்தன்     8. செவ்வாழை - அண்ணாதுரை 9. நொண்டிக்கிளி - தி ஜ ரங்கநாதன்   10.ஆனைத்தீ - தொ மு சி ரகுநாதன்      11. பரதேசி வந்தான் - தி ஜானகிராமன்     12. பஞ்சத்து ஆண்டி - தி ஜானகிராமன்           13.பாயசம் - தி ஜானகிராமன்     14. கோதாவரிக்குண்டு - தி ஜானகிராமன்        15. சிலிர்ப்பு - தி ஜானகிராமன்  16.அக்கினிப்பிரவேசம் - ஜெயகாந்தன்     17. பிரசாதம் - சுந்தர ராமசாமி    18. பல்லக்கு தூக்கிகள் - சுந்தர ராமசாமி  19.கோயில் காளையும் உழவு மாடும்  - சுந்தர ராமசாமி    20. ரத்னாபாயின் ஆங்கிலம்  - சுந்தர ராமசாமி  21. விகாசம் - சுந்தர ராமசாமி 22. காகங்கள் - சுந்தர ராமசாமி   23. விமோசனம் - அசோகமித்திரன்      24. புலிக்கலைஞன்- அசோகமித்திரன் 25. காந்தி - அசோகமித்திரன்      26. பிரயாணம் - அசோகமித்திரன்     27. காலமும் ஐந்து குழந்தைகளும் – அசோகமித்திரன் 28.தனுமை - வண்ணதாசன்     29. ஞாபகம் - வண்ணதாசன்       30. நிலை – வண்ணதாசன் 31. போய்க்கொண்டிருப்பவள் - வண்ணதாசன்    32. எஸ்தர் - வண்ணநிலவன்     33. பலாப்பழம் - வண்ணநிலவன்  34.மிருகம் - வண்ணநிலவன்  35. பாற்கடல் - லா ச ராமாமிர்தம் 36. பச்சைக்கனவு - லா ச ராமாமிர்தம் 37. ஜனனி - லா ச ராமாமிர்தம்  38.புற்று - லா ச ராமாமிர்தம்      39. அபூர்வ ராகம் - லா ச ராமாமிர்தம் 40. தத்துப்பிள்ளை - எம் வி வெங்கட் ராம்     41. பைத்தியக்காரப்பிள்ளை - எம் வி வெங்கட் ராம்  42. மதினிமார்கள் கதை – கோணங்கி 43. கோப்பம்மாள் - கோணங்கி      44. கருப்பு ரயில் - கோணங்கி        45. அம்மா ஒரு கொலை செய்தாள் – அம்பை 46. வீட்டின் மூலையில் ஒரு சமையலறை - அம்பை 47. கருப்புக்குதிரை சதுக்கம் - அம்பை  48. நாற்காலியும் நான்கு தலைமுறைகளும் – திலகவதி 49. சாசனம் - கந்தர்வன்      50. காளிப்புள்ளே - கந்தர்வன்       51. உயிர் - கந்தர்வன்  52. மங்கலநாதர் - கந்தர்வன்       53. முள் - பாவண்ணன்      54. பேசுதல் - பாவண்ணன்  55. உரிமைத்தாகம் - பூமணி   56. பொறுப்பு - பூமணி       57. வயிறு – பூமணி  58. பெட்டை - பூமணி     59. நொறுங்கல் - பூமணி        60. தகனம் – பூமணி  61. கரு - பூமணி        62. நாயனம் - ஆ மாதவன்   63. எட்டாவது நாள் - ஆ மாதவன்     64. பதினாலு முறி -ஆ மாதவன்    65. தண்ணீர் - ஆ மாதவன்       66. பூனை - ஆ மாதவன்   67.புறாமுட்டை - ஆ மாதவன்      68. அன்னக்கிளி - ஆ மாதவன்    69. மருமகள் வாக்கு - கிருஷ்ணன் நம்பி  70.தங்க ஒரு - கிருஷ்ணன் நம்பி     71. சித்தி - மா அரங்கநாதன்    72. மெய்கண்டார் நிலையம் - மா அரங்கநாதன்  73. திசைகளின் நடுவே - ஜெயமோகன்    74. போதி - ஜெயமோகன்     75. படுகை - ஜெயமோகன்  76. மாடன்மோட்சம் - ஜெயமோகன்     77. தாவரங்களின் உரையாடல் - எஸ் ராமகிருஷ்ணன்    78. வேனல் தெரு - எஸ் ராமகிருஷ்ணன் 79.பறவைகளின் சாலை - எஸ் ராமகிருஷ்ணன்     80. வால் - அழகிய சிங்கர்  81. சிறுமி கொண்டுவந்த மலர் - விமலாதித்த மாமல்லன்  82. கடிதம் - திலீப்குமார்     83. மூங்கில் குருத்து - திலீப்குமார்    84. அக்ரஹாரத்தில் ஒரு பூனை - திலீப்குமார் 85.விரித்த கூந்தல் - சுரேஷ்குமார் இந்திரஜித் 86. மறைந்து திரியும் கிழவன் - சுரேஷ்குமார் இந்திரஜித்  87. மொழி அதிர்ச்சி - கோபி கிருஷ்ணன் 88. காணிநிலம் வேண்டும் - கோபி கிருஷ்ணன்    89. பதினெட்டாம் பெருக்கு - ந பிச்சமூர்த்தி   90. வானம்பாடி - ந பிச்சமூர்த்தி 

 

தமிழில் தவிர்க்க முடியாத சில சிறுகதைகள் என்று தமிழ்மகன் விகடன் இயர்புக்கில் குறிப்பிடும் சிறுகதைகள்

 

1. காஞ்சனை - புதுமைப்பித்தன்   2. அழியாச்சுடர் - மௌனி    3. பிரபஞ்ச கானம் - மௌனி  4. கனகாம்பரம் - கு ப ராஜகோபாலன்   5. நட்சத்திரக்குழந்தைகள் - பி எஸ் ராமையா    6. ஞானப்பால் - ந பிச்சமூர்த்தி 7. அக்பர் சாஸ்திரி - தி ஜானகிராமன்     8. ராஜா வந்திருக்கிறார் - கு அழகிரிசாமி      9. கன்னிமை - கி ராஜநாராயணன்  10. ரத்னாபாயின் ஆங்கிலம் - சுந்தர ராமசாமி   11. பாற்கடல் - லா ச ராமாமிர்தம்      12. ஒரு ராத்தல் இறைச்சி – நகுலன் 13. பிரயாணம் - அசோகமித்திரன்     14. அக்னிப்பிரவேசம் - ஜெயகாந்தன்  15. தாலியில் பூச்சூடியவர்கள் - பா ஜெயப்பிரகாசம்   16. காடன் கண்டது - பிரமிள்     17. உயரமாக சிவப்பா மீசை வைக்காமல் - ஆதவன் 18. பைத்தியக்காரப் பிள்ளை - எம் வி வெங்கட்ராம் 19. கூந்தலழகி - அ முத்துலிங்கம்    20. நீர்மை - ந முத்துசாமி         21. அம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை 22. எஸ்தர் - வண்ணநிலவன்        23. புற்றில் உறையும் பாம்புகள் - ராஜேந்திர சோழன்    24. தனுமை – வண்ணதாசன் 25. நாயனம் - ஆ மாதவன்     26. ஆட்டக்காரன் - சுஜாதா       27. தக்கையின் மீது நான்கு கண்கள் - சா கந்தசாமி  28. நடிகன் - ஜி நாகராஜன்      29. மருமகள் வாக்கு - கிருஷ்ணன் நம்பி      30. ரீதி - பூமணி  31. சூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன்      32. அப்பாவின் வேஷ்டி -பிரபஞ்சன்       33. சோகவனம் - சோ தர்மன் 34.கல்லுக்கு கீழேயும் பூக்கள் - மாலன்      35. சின்ன சின்ன வட்டங்கள் - பாலகுமாரன்     36. ஒரு கப் காப்பி - இந்திரா பார்த்தசாரதி 37.மூங்கில் குருத்து - திலீப் குமார்     38. மறைந்து திரியும் கிழவன் - சுரேஷ்குமார் இந்திரஜித்    39.சாசனம் – கந்தர்வன் 40.மேபல் - தஞ்சை ப்ரகாஷ்       41. அரசனின் வருகை - உமா வரதராஜன்       42. நுகம் - எக்பர்ட் சச்சிதானந்தம் 43.முள் - சாருநிவேதிதா      44. வேட்டை - சுப்ரபாரதி மணியன்       45. வனம்மாள் –அழகியபெரியவன் 46. கனவுக்கதை - சார்வாகன்    47. ஆண்மை - எஸ் பொன்னுத்துரை       48.அந்நியர்கள் - ஆர் சூடாமணி  49. வீடுபேறு - மா அரங்கநாதன்    50. புயல் - கோபிகிருஷ்ணன்   51. மதினிமார்கள் கதை - கோணங்கி  52. வெயிலோடு போய் - தமிழ்ச்செல்வன்      53. யானை டாக்டர் - ஜெயமோகன்    54. ராஜன் மகள் - பா வெங்கடேசன்  55.தாவரங்களின் உரையாடல் - எஸ் ராமகிருஷ்ணன்      56. இருளப்ப சாமியும் 21 ஆட்டுக்கிடாய்களும் - வேல ராமமூர்த்தி 57.ஒரு திருணையின் பூர்வீகம் -சுயம்புலிங்கம்      58. விளிம்பின் காலம் - பாவண்ணன்     59. வேட்டை - யூமா வாசுகி  60. நீர் விளையாட்டு - பெருமாள் முருகன்       61. தம்பலா - பாரதி வசந்தன்      62. அழகர்சாமியின் குதிரை - பாஸ்கர் சக்தி 63.தம்பி - கௌதம சித்தார்த்தன்  

 

சிவசங்கர் ஜெகதீசன் தனது வலைப்பக்கத்தில் குறிப்பிடும் சிறந்த கதைகள்

ராஜா வந்திருக்கிறார், பிரசாதம், கதவு, நகரம் கதைகள் அட்டகாசம்.

1. ராஜா வந்திருக்கிறார் - கு.அழகிரிசாமி  2. பிரசாதம் - சுந்தர ராமசாமி 3. விகாசம் - சுந்தர ராமசாமி  4. கதவு - கி.ராஜநாராயணன்  5. நகரம் - சுஜாதா  6. பாயசம்-தி. ஜானகிராமன் 7. பஞ்சத்து ஆண்டி- தி. ஜானகிராமன்   8. குருபீடம் - ஜெயகாந்தன்   9. முன்நிலவும் , பின்பனியும்- ஜெயகாந்தன் 10. நாயனம் - ஆ. மாதவன்     11. ஒரு ராத்தல் இறைச்சி - நகுலன்   12. பலாப்பழம் – வண்ணநிலவன் 13. எஸ்தர் - வண்ணநிலவன்   14. தக்கையின் மீது நான்கு கண்கள் - சா.கந்தசாமி  15. புலிக்கலைஞன் – அசோகமித்திரன் 16. பாற்கடல் - லா.ச.ராமாமிருதம்   17. அழியாச்சுடர் - மெளனி   18. கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் - புதுமைப்பித்தன்  19. காடன் கண்டது - பிரமீள்   20. மகாராஜாவின ரயில் வண்டி - அ. முத்துலிங்கம் 21. புற்றிலுறையும் பாம்புகள் - ராஜேந்திர சோழன்

 

Email: -  enselvaraju@gmail.com